#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் இறைவனின் பாதம் ஒன்றே கதி என்று நினைத்து அவனது சரணங்களை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இறைவன் நிச்சயம் நற்கதியைத்தான் அருள்வான் என்பதில் சந்தேகமே இல்லை. அப்படிப் பட்ட அந்த இறைவனின் சரணத்தைக் கெட்டியாகப் பற்ற வேண்டியது நம் கடமை. ஸ்ரீ ராமருக்கு சரணாகத
வத்ஸலன் என்ற ஒரு திருநாமம் உண்டு. ராமாயணத்தில் பால காண்டம் துவங்கி, யுத்த காண்டம் வரை இந்த சரணாகதி தத்துவத்தை மிகவும் அழகாய் பார்க்கலாம். #பாலகாண்டத்தில் தேவர்கள் பகவான் ஸ்ரீமன் நாராயணன் இடத்தில் சரணாகதி செய்கிறார்கள்.
#அயோத்யாகாண்டத்திலபரதன் சரணாகதி மற்றும் குகனோடு சக்யம்.
#ஆரண்யகாண்டத்தில் ரிஷிகள் ராமச்சந்திர மூர்த்தியிடம் சரணாகதி செய்கிறார்கள்.
#கிஷ்கிந்தாகாண்டத்தில் சுக்ரீவன் சரணாகதி.
#யுத்தகாண்டத்தில் விபீன் சரணாகதி செய்கிறார். இதில் விபீஷண சரணாகதிக்குத்தான் தனியொரு பெருமையும், விசேஷமும் இருக்கும். சரணாகதி லட்சணம் என்பது பரிபூர்ணமாக இருந்தது
இதில்தான். சரணாகதிக்கு ஐந்து அங்கங்கள் உள்ளது. விபீஷண சரணாகதியில்தான் அது புர்த்தியாய் இருந்தது. அந்த சரணாகதி தத்துவத்தில் சொல்லப்படும் ஐந்து அங்கங்கள் என்னென்ன?
#அநுகூல்யசங்கல்பம்- இறைவனுக்கு அனுகூலமான செயல்களைச் செய்தல். அதாவது எவையெல்லாம் தர்மத்துக்கு உகந்ததோ, அவையெல்லாம்
இறைவனுக்கு அனுகூலம்.
#ப்ராதிகூல்யவர்ஜநம்- இறைவனுக்கு விரோதமானவற்றை செய்யாதிருத்தல். தர்மத்துக்கு மாறுபட்ட, முரணான அனைத்தும் இறைவனுக்கு விரோதம்.
மகாவிசுவாஸம்- இறைவன் அவசியம் ரக்ஷிப்பான் என்ற நம்பிக்கை கொள்ளல். காலக்கெடு நிர்ணயம் செய்யாமல், சந்தேகம் கொள்ளாமல், பூர்ணமாயிருத்தல்.
#கோப்த்ருத்வவரணம்- சரணம் அடைந்தேன், ரட்சகனாக இருத்தல் வேண்டும் என பிரார்த்தித்தல்.
#கார்ப்பண்யம்- என்னைக்காத்துக் கொள்ள என்னிடம் ஆற்றல் இல்லை எனச் செருக்கு நீங்கிடல்.
சரணாகதியில் இருக்கக்கூடிய இந்த ஐந்து அங்கங்களையும் தாண்டி, விபீஷணரிடம்தான் அங்கீ என்கிற ஆறாவது தன்மையும் இருந்தது
#அகிஞ்சன: அகிஞ்சன என்றால் விருப்பு, வெறுப்பின்றி இருத்தல் என்பது பொருள்.
ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகன் சொல்றார்: பிராட்டியும், பகவானும் விட்டாலும், நான் விடமாட்டேன் என அவர்களின் பாத கமலம் சொல்லுமாம். விபீஷணர் எல்லாத்தையும் விட்டுட்டு பகவான் ஸ்ரீராமனின் பாதமே கதி என அப்படித்தானே வந்தார
ஸ்ரீராமன் பரிபூர்ண பக்திக்கு, சரணாகதிக்கு பகவான் தன்னையே தருகிறார் என்பது இங்கே சூட்சுமமாக உணர்த்தப்படுகிற விஷயம்.
பெருமாளின் குணங்களில் ஆழ்ந்திருப்பவர்கள் ஆழ்வார்கள். பகவானின் சரணமே கதி என சரணாகதி செய்த விபீஷணனுக்கும் விபீஷணாழ்வார்னு பேரே கிடைத்தது.
நம்பிக்கையோடு நாமும்
ஸ்ரீ ராமனின் திருவடியை பற்றுவோம். அத்திருவடி நம்மை ஒருக்காலமும் கைவிடாது என உறுதியாக நம்புவோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Mar 27
#தீட்சை தீக்ஷா என்னும் சமஸ்கிருதச் சொல்லிருந்து தீட்சை என்ற தமிழ்ச்சொல் பிறந்தது. இதற்கு கொடுத்துக் குறைப்பது என்று பொருள். ஞானத்தைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்று ஆகமங்கள் சொல்கின்றன. இச் சொல்லில் தீ-கொடு, க்ஷி-அழித்தலைக் குறிக்கிறது. ஞானமாகிய நற்பேற்றை அளித்து, மும்மலங்களை Image
அழிப்பதால் இது தீக்ஷா (தீட்சை). #தீக்கை உள்ளத்து அழுக்கைத் தீயிலிட்டுக் கொளுத்துவது தீக்கை (தமிழ்ச்சொல்). மனிதப் பிறவியின் நோக்கம் இறைவனை அடைவதே. உலகியல் அறிவு எல்லாமே ஏதோ ஒரு ஆசிரியர் வழியே தான் நாம் அறிகிறோம். அப்படியிருக்க எல்லாவற்றிலும் உயர்ந்ததான ஆன்மீக அறிவு, அதில் அனுபவம்
பெற்ற ஒரு குரு வழியேதான் ஒரு சாதகனுக்கு வந்து சேரும். அப்படிப்பட்ட குருவிடம் பூரண சரணாகதி செய்வதன் மூலமே ஒரு ஆன்மீக சாதகன் தன் அகங்காரத்தைத் துறந்து அறிய வேண்டியதை அறிய முடியும். அதற்கு, குருவருளின் ஒரு அங்கமாக, வழிகோலும் ஒரு அடிப்படைச் சாதனமாக குரு தருவதுதான் தீட்சை எனலாம்.
Read 14 tweets
Mar 27
#MahaPeriyava
Sri Maha Periyava was camping at Kalavai. One morning an advocate from Thanjavur came for darshan by car. There was a lot of fanfare. His wife wore the saree in the traditional manner, the sons dhoti and upper cloth, the gentleman himself a dhoti in a traditional Image
manner, upper cloth and a gem studded gold chain around his neck. He held a large plate on which were fruits, flowers, sugar candy, grapes, cashew nuts, honey and with all these, money, packed inside a cover. They placed the plate in front of Sri Maha Periyava and prostrated to
Him. Periyava gently probed the plate with His eyes.
“What cover is that?”
“Just a little money”
“By little do you mean ten or fifteen rupees?”
The lawyer’s ego was probably hurt. He was known to be the best criminal lawyer in his district. Why did Periyava estimate of him so
Read 10 tweets
Mar 27
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் கோவிந்தசாமி என்பவர் திருப்பதியில் வாழ்ந்து வந்தார். அவருக்குப் பெரிய மன்னராகி ராஜ போகங்களை அனுபவிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஒருமுறை கிருஷ்ண லீலை உபன்யாசத்திற்கு அவர் சென்றிருந்தார். அங்கே உபன்யாசகர் ஐந்து லட்சம் கோபிகைகளோடு கண்ணன் நடனமாடிய ராச லீலையைப் Image
பற்றி விவரித்தார். அதை மேலோட்டமாகக் கேட்ட கோவிந்தசாமி, அது ஏதோ காமக் கேளிக்கை எனக் கருதினார். இயல்பாகவே உலகியல் இன்பங்களை நோக்கிச் செல்லக் கூடியதான அவரது மனம், அந்த ராச லீலையென்னும் கேளிக்கையைக் காண வேண்டுமென ஏங்கியது. அந்த ஏக்கம் தவிப்பாக மாறியது. அவ்வூரில் இருந்த ஒரு ஞானியைச்
சந்தித்துத் தன் ஏக்கத்தைப் பற்றித் தெரிவித்தார் கோவிந்தசாமி. அதற்கு அந்த ஞானி, ராசலீலை என்பது நீ நினைப்பது போல உடல் ரீதியிலான காமம் அல்ல. வைகுண்டத்தை அடைந்த ஜீவாத்மாக்கள், அங்கே பரமாத்மாவோடு உறவாடுவதைத் தான் இந்த ராச லீலை மூலமாகக் கண்ணபிரான் உருவகப்படுத்தி நமக்குக் காட்டியுள்ளான்
Read 12 tweets
Mar 26
வீட்டில் பழுதடைந்த, உடைந்து போன அல்லது தேய்ந்து போன விக்ரகங்கள், படங்களை என்ன செய்வது?
இந்த பிரச்சினை/கேள்வி எல்லோருக்கும் இருப்பதே. பல பேர் தங்கள் வீட்டில் பின்னமான விக்ரகங்கள், படங்களை ஏதோ ஒரு கோவிலிலோ அல்லது சாலையோரத்திலோ, மரத்தின அடியிலோ போட்டுவிட்டு போய்விடுகிறார்கள். ஆனால் ImageImageImage
தெரிந்தோ, தெரியாமலோ அப்படி செய்வது மஹா பாவம். மன்னிக்கமுடியாத குற்றம்.
வீட்டில் இருந்தவரை பூஜைகள் செய்து, பிறகு அவசியம் இல்லாத போது, பாழடைந்தவற்றை உதாசீனப் படுத்தக்கூடாது. அப்படி சாலையோரத்தில் உள்ள நமது ஹிந்து தெய்வங்களின் படங்களை பார்த்து இதர மதத்தவர்கள் நம் மதத்தை குறித்து
கிண்டலும், கேலியும் செய்கிறார்கள். மற்ற மதத்தவரின் தெய்வ படங்களை அது போல் எங்காவது கண்டதுண்டா என்பதை யோசித்து பாருங்கள். தயவு செய்து நமக்கு அவசியம் இல்லாத படங்களை, விக்ரங்களை அக்னி பகவானுக்கு ஆஹுதி கொடுப்பது (சமர்பிப்பது) நல்லது. அதெப்படி ஸ்வாமி படங்களை அக்னியில் போடுவது சரிதானா Image
Read 5 tweets
Mar 26
#MahaPeriyava
Namaskaram. I am Dr.Venkataraghavan, an eye surgeon. My wife, Gayathri Venkataraghavan is a musician and both of us owe everything in life to the boundless Grace of Sri Maha Periyava. I just have an experience to share with all of you. Many years back about (12 to
13), a Muslim gentleman walked into my clinic. Seeing Sri Maha Periyava’s photo, he bowed in reverence and mentioned that Sri Maha Periyava is a great sage. I was surprised and asked him how he knew about Sri Maha Periyava. The Muslim gentleman shared his experience which I
shall present in the first person account as narrated to me. “Sir, I was a linesman in electricity board about 30 years back. We in a group of 5 or 6, went to the Kanchi Matham to attend to a fault. Sri Maha Periyava who was seated there, gestured me to come and queried whether I
Read 10 tweets
Mar 25
ஸ்ரீரங்கம் #நம்பெருமாள் பெயர் வர காரணம் -
வைகாசி 17, வைஷ்ணவர்களின் வாழ்வில் மிக முக்கியமான ஒரு நாள். அரங்கன் 48 ஆண்டுகள் வனவாசம் சென்று திரும்பி வந்த நாள்! இஸ்லாமிய ஆட்சி இந்தியாவில் ஏற்பட்ட போது, 12 ஆம் நூற்றாண்டில் இந்துகளின் கோவில்களும் கோவில் சொத்துக்களும் அவர்களால் பெருமளவு
சூறையாடப்பட்டன. மதுரை, ஸ்ரீரங்கம் என பிரசித்தி பெற்ற பல கோவில்கள் தாக்கப்பட்டு அங்கிருந்த விக்ரகங்கள் மற்றும் பெரும் செல்வங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. 1310 ஆம் ஆண்டு படையெடுப்பின் போது, திருவரங்கத்தின் உற்சவர் அழகிய மணவாளன் கவர்ந்து செல்லப்பட்டார். உள்ளூர் பெருமக்கள், கரம்பனூர்
பின்சென்றவல்லி மற்றும் அரையர்கள் ஆகியோர் 8 ஆண்டுகள் முயற்சிகள் பல செய்து டெல்லி வரை சென்று அழகிய மணவாளனை மீட்டு வந்தனர் ஆனால், 1323 ஆம் ஆண்டு இஸ்லாமிய படையெடுப்பின் போது, பிள்ளை லோகாச்சாரியார் என்கிற வைணவப் பெரியவர் மூலவர் ரங்கநாதரையும், ரங்கநாயகியையும் சுவர் எழுப்பி மறைத்து
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(