பொறுமையாக மகளிடம் விசாரித்தார்,அவன் பெயர் என்ன? அவள் சொன்னாள் "குளோஸ் ஈச்மென்"😷,சரி அந்த சனியனை பெற்ற பெரிய சனியன் பெயர் 😂 என்ன? என்றதற்கு சில்வியாவின் பதில் "
யூத மூளையில் ஒரு கணம் மின்னல் வெட்டியது,அப்பன் பெயர் "ரிக்கார்டோ கிளமெண்ட்" மகன் பெயர் "குளோஸ் ஈச்மென்", எங்கோ இடித்தது அவருக்கு, குடும்பபெயர் இப்படி இருக்காதே, ஒருவேளை தத்துபிள்ளையோ? என்றெல்லாம் யோசித்து சொன்னார்
இதுதான் ஈச்மென் செய்த பெரும் தவறு,மகன்களின் அடையாளத்தை மாற்ற தவறிவிட்டார்,இங்குதான் அவர் தலைவிதி பல்லைகாட்டியது அல்லது செய்த மொத்தபாவத்தில் பாதி மகனாகவும் மீதி சில்வியாகவும் பிறந்திருந்தது.
அவ்வளவுதான் இருவருக்கும் முன்னால் காப்பி இருந்தது, அது யாருக்கு வேண்டும்?,
நாங்கள் ஜெர்மானியர்,எனக்கு 2 வயதாக இருக்கும்பொழுது ஹிட்லர் எனக்கு நெற்றியில் ஸ்வாஸ்திக் அடையாளமிட்டு ஆசீர்வதித்தார்.
உண்மையில் அவனுக்கு ஒரு புண்ணாக்கும் தெரியாது, கண்ணின் கடைவிழி காதலியர் காட்டிவிட்டால் பொங்கி வரும் ஆனந்தத்தில் அப்படி சொல்லி கொண்டிருந்தான்
பொறுமையாக கேட்ட சில்வியா ஒரு ரதி புன்னகையோடு சொன்னாள்,நாளை என் வீட்டுக்கு வா, என் தந்தை உன்னை பார்க்கவேண்டுமாம்.
குளோஸ் அதோடு கனவில் விழுந்தான்,
ஏற்கனவே காப்பிகோப்பையின் அளவு,விலை,குளோசின் உளரல் என சகலத்தையும் ஒப்பித்திருந்தாள் சில்வியா,
சரி நீ போ,நான் உன் தந்தை வீட்டுக்கு வந்து அவரிடம் பேசுகிறேன் என சொல்லி அனுப்பிவிட்டு,
சம்பந்தம் பேச வந்திருக்கிறார் என குளோஸ் மகிழ்வோடு கதவை திறந்தான்,50 வயது ஈச்மெனும் லோதரை வரவேற்றார்
வந்திருப்பது தன் தூக்கு கயிறு என அப்போதைக்கு ஈச்மெனுக்கு தெரியவில்லை
இன்று அமைதியாக இங்கு வசிக்கின்றேன்,சர்வம் கிறிஸ்துவுக்கு அர்ப்பணம், கிறிஸ்துவின் சமாதானம் உங்களோடும் என்னோடும் அர்ஜெண்டினாவோடும் இருப்பதாக!
அது இருக்கட்டும் இப்பொழுது நானும் நீரும் அர்ஜெண்டிக்காரர்கள் அவ்வளவுதான்"
அன்று அர்ஜெண்டினா முழுக்க பல நாசிக்கள் இருந்தார்கள் இது ஒரு பிரச்சினையே அல்ல என்பது ஈச்மெனுக்கு தெரியும்,அதனால்தான் தைரியமாக சொன்னார்.
இருவரும் 30 நிமிடம் பேசினார்கள்,ஈச்மெனின் உருவ அமைப்பை நன்கு ஆராய்ந்த லோதர் சொன்னார்,நான் சர்ச்சிக்கு செல்லவேண்டும்,
கைகுலுக்கி சென்றவர் சர்ச்சிற்கா சென்றார் இல்லவே இல்லை,எல்லா நாட்டு தூதரகங்களிலும் குறைந்தது 3 உளவு அதிகாரிகளாவது இருப்பர், இது தான் உலக நடைமுறை.
சொல்லிவிட்டு மனதிற்குள் சொல்லிகொண்டார், "நான் தனியாள் அல்ல, 60 லட்சம் யூதரின் ஆன்மா" 😉
சுட்டுகொல்வது மொசாத்திற்கு டீ குடிப்பது போல,ஆனால் உயிரோடு கடத்தவேண்டும், என்பதால் யோசித்தார்கள்.
அவர் ரபி எய்டன்,அசகசாய சூரன்.
அவரிடம் பொறுப்பும்,ஈச்மெனின் குறிப்பு அடங்கிய கோப்பும்
எப்படி கிளம்பினர்? கிரிக்கெட் அணிபோல மொத்தமாக இறங்கினால் ஏர்போர்ட்டிலே மாட்டிகொள்வர்,உலகம் முழுக்க பிரிந்தனர்,பின்னர் லண்டன்,பாரீஸ்,பிராங்கபர்ட், லாஸ் ஏஞ்சல்ஸ்,கெய்ரோ என பல
அவர்கள் வருவது ஆண்டவனுக்கே தெரியுமா என்பது சந்தேகம்,ஆனால் லோதர் வந்து நீங்கள் ஜெர்மானியரா என கேட்டதில் ஈச்மெனின் ராணுவ மனது விழித்துகொண்டது,வீட்டை மாற்றியிருந்தார்.
வீட்டை மாற்றினால் என்ன? கம்பெனி இருக்கிறதல்லவா? ரகசியமாக பென்ஸ் கார் கம்பெனி பணியாளர் லிஸ்டில் ஊடுருவி ரிக்கார்டோ கிளமென்ட்டின்
8 மாதம் இது நடைபெற்றது,தாங்கள் பார்க்கும் நபரின் உருவத்தையும் கோப்பில் காணப்படும் அடையாளங்களை வைத்து ஒப்பிட்டு பார்ப்பதை தவிர வேறு என்ன செய்யமுடியும்?
இது சந்தேகம் தான்,இவர்தான் ஈச்மென் என உறுதிபடுத்தபடவில்லை,
சந்தேகத்தின் பேரில் கொல்லலாம்,கடத்தினால் விவகாரம் பெரிதாகும்,இவர் போலி ஈச்மென் என்றால் ஒரிஜினர் ஈச்மென் தற்கொலை செய்தாலும் செய்வார்,சிக்கவே மாட்டார்
அதனால் இவரை கண்காணிக்கும் திருப்பணியினை மட்டும் அப்பொழுது
ஈச்மெனும் ஒழுங்காக வேலைக்கு சென்றார்,பேருந்தில் திரும்பினார், சமத்து அகதியாக தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தார், அவர்தான் ஈச்மெனா என்பதில் மொசாத்திற்கே குழப்பம்
இந்நிலையில் ஒருநாள் பெரிய கேக் வாங்கினார் ஈச்மென்,அதோடு பூங்கொத்தும் வாங்கினார்,
அது,அன்று ஈச்மெனின் திருமண நாள் என பைல் சொல்லிற்று,இதைபோல அன்னாரின் பிறந்தநாளை அவர் கொண்டாடியதையும் உறுதிபடுத்தியிருந்தார்கள்
காரணம் கிட்டதட்ட 100 சிக்கல்கள் இருந்தன,கொஞ்சம் பிசகினாலும் சாரி ஹிஹிஹி என சமாளிக்கும் முருங்கக்காய் சாம்பாரில் உப்பு பிரச்சினை அல்ல,மொசாத்தையே மூட வைக்கும் அல்லது இஸ்ரேலையே சிக்கலாக்கும் மகா பிரச்சினைகள் அவை.
சொல்லிவிட்டு கடத்தினால் எப்படி இஸ்ரேலுக்கு அர்ஜென்டினா கண்ணில் மண்ணை
ஈச்மெனை கண்காணித்தபடியே ஹிட்லர் அங்கு எங்காவது இருப்பானா? இவர் கார் மெக்கானிக் என்றால் அவன் டயருக்கு பஞ்சர் போட்டு கொண்டிருக்கமாட்டானா என தேடவும் மொசாத் தவறவில்லை
முதல்படம் மொசாத்தின் சின்னம், சகல கிறிஸ்தவருக்கும் தெரிந்தது கடவுள் மோசஸிடம் சொன்னபடி அவர் செய்த 7 விளக்குதண்டுகள் தான், (பார்த்தவுடன் கத்தோலிக்கர் பிதா,சுதன்,தூய ஆவி அடையாளமிடுவார்கள், சில சபையினர் "அல்லேலூயா" என்பார்கள்,
இரண்டாம் படம் "கேப்டன்" ரபி எய்டன்
மூன்றாம் படம் சில்வியா,இந்த அழகிற்கெல்லாம் அந்த குளோஸ் மயங்கியிருக்கமுடியாது,விதி விளையாடியிருக்கலாம் 😂