SSR Profile picture
1 Nov, 30 tweets, 12 min read
சர்தார் வல்லபாய் படேல்:-(Thread)

இந்தியாவின் முதல் துணை பிரதமர் ,உள்துறை அமைச்சர் என இரு பதவி வகித்த இவருக்கு போய் ரூ.3000 கோடி செலவு செய்து 182 மீட்டர் (600 அடி) உலகின் உயரமான சிலையை குஜராத் அரசாங்கம் அமைத்தது என பிரதமர் மோடியை நானே திட்டிருக்கேன்.

#SSRThreads
#JaiHind
பட்டேலுக்கு நேற்று பிறந்தநாள் அவருடைய வரலாறு படித்தபின் இதுபோல் அனைத்து மாநிலத்திலும் வைத்தாலும் தப்பில்லை என தோன்றியது

இந்த திரேட் படித்தபின் உங்களுக்கும் தோன்றினால் நீங்களும் தேசப்பற்றுள்ள இந்தியரே

இன்றைய தலைமுறைக்கு சர்தார் வல்லப்பாய் படேலைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை
இந்தியா விடுதலை அடைவதற்கு அவர் ஆற்றிய செயற்கரிய செயல்களும், விடுதலை பெற்ற இந்தியாவின் நன்மைக்கு அவர் முன்னெடுத்து செய்த ஒப்பற்ற காரியங்களும், இரும்பு மனிதர் என்று அவருக்கு வழங்கப்பட்டபெயருக்கான காரணத்தையும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சர்தார் வல்லபாய் படேல் லேவா படேல்
சமூகத்திலிருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள கரம்சாத் என்ற ஊரில் 1875-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந்தேதி பிறந்தார்.

இவருக்கு சோமாபாய், நர்சிபாய் மற்றும் விதால்பாய் பட்டேல் என்ற மூன்று அண்ணன்களும், காசிபாய் என்ற
தம்பியும் தைபா என்ற தங்கையும் உடன் பிறந்தவர்கள்.
பட்டேல் வழக்கறிஞர் ஆக வேண்டும் என 1910 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்று பட்ட படிப்பு படித்தார்.

வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தியவர்.

சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது காந்தியின் உரையை கேட்டு வக்கீல் தொழிலை உதறி சுதேசி இயக்கத்தில் இணைந்தார்
பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் படேலுக்கு வெற்றி கிடைத்தது அப்போதிருந்து மக்களால் ‘சர்தார்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார்.

இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் முக்கியமானவராக இருந்தார்.
காந்தியின் சத்யாகிரக போராட்டங்களில் கலந்து கொண்டடு தைரியமாக வெள்ளையர்களை எதிர்த்து சிறை சென்றவர்.

அதன் பிறகு போராட்டங்களும் சிறைவாசமும் அவருக்கு வாடிக்கையாகிப் போனது.

1947ல் இருந்து 1950 வரை இந்தியாவின் துணை பிரதமராகவும் 1948-ல் இருந்து 1950 வரை உள் துறை அமைச்சராக இருந்தவர்.
இவர் எல்லோராலும் இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்டவர் எதற்க்காக அழைக்கப்பட்டார் என பார்ப்போம் வாருங்கள்

#இந்தியாவின்_இரும்புமனிதர்

ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் போது சிற்றரசர்கள் கீழ் உடைபட்டு இங்கு 565 சுதேச அரசுகள் (தனித்தனி இராஜ்ஜியங்களாக) இருந்தது.
நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை வி.பி.மேனனுடன் இணைந்து ஒன்றிணைத்தது தான் உள்துறை அமைச்சராக அவர் ஆற்றிய முதல் பணி.

565 ராஜ்ஜியங்களை எல்லாம் கண்மூடி கண்திறப்பதற்குள் இந்தியாவோடு இணைத்த படேலுக்கு
காஷ்மீர், ஜுனகத் மற்றும் ஹைதராபாத் அரசுகள் மட்டும் தண்ணி காட்டி வந்தன.

பிரிட்டிஷ் ஆட்சியிலேயே, ஹைதராபாதிற்கு என்று தனியாக ராணுவம், ரயில் சேவை மற்றும் தபால் துறை போன்ற வசதிகள் கொண்டு இந்தியாவின் நம்பர் 1 சுதேச அரசாக இருந்தது.

மூன்றையும் இணைக்கும் பொறுப்பை நேருவே எடுத்துகொண்டார்
அது மட்டுமல்லாது பிரிட்டிஸ் இந்தியாவில் உள்ள இஸ்லாமிய அரசு என்கிற பெயர் வேறு ஹைதராபாத் அரசுக்கு இருந்தது

ஹைதராபாத். அரசின் பரப்பளவு எவ்வ ளவு தெரியுமா?

Englandயும் Scotlandயும் ஒன்று சேர்த்த அளவிற்கு மிகப்பெரிய பரப்பளவு கொண்டு
இந்தியாவிலேயே சர்வ வல்லமையாக இருந்தது ஹைதராபாத்.
அப்போதைய ஹைதராபாத்தின் நிஜாமாக இருந்தவர் மீர் உஸ்மான் அலிகான் பகதூர்.

இவர் இந்தியாவுடன் ஹைதராபாதை இணைப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து ஜின்னாவுக்கு அழைப்பு கொடுத்து ஹைதராபாத் பாகிஸ்தானோடு இணைய விரும்புவதாக அறிவித்தார்.

இதை இந்தியா எதிர்த்து ராணுவ நடவடிக்கைக்கு தயாரானது,
ஹைதராபாத் இந்தியாவோடு தான் இணைய வேண்டும் என்று அங்கிருந்த இந்துக்கள் சுவாமி ராமானந்த தீர்த்தர் என்கிற துறவி தலைமையில் போராட ஆரம்பித்தார்கள்.

அவர்களை ஹைதராபாத் நிஜாமிற்கு ஆதரவாக நின்ற ரசாக்கர்கள என்கிற இஸ்லாமிய கூலிப்படை கொன்று குவிக்க ஆரம்பித்தார்கள்.
இவர்கள் தலைவனாக Qasim Razvi என்கிற வக்கீல் இருந்து வந்தான் இவன் வேறு யாருமல்ல இப்பொழுது ஹைதராபாத்தை ஆட்டுவித்துக்கொண்டு இருக்கும் அசாதுதீன் உவைசியின் குரு என்றே கூறலாம்.

உவைசியின் மஜ்லிஸ் இ இத்ஹதுல் முஸ்லிமீன் என்கிற அமைப் பின் அப்போதைய தலைவர் தான் இந்த காஸிம்ரிஸ்வி.
இந்த அமைப்பு 1911 லியே ஹைதராபாத் நிஜாமால் துவங்கப்பட்ட அமைப்பு ஆகும்.
இது துவக்கப்பட்ட உடனே ஹைதராபாத் இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்டது.

உஸ்மானியா பல்கலைக்கழகத்த கொண்டு வந்த ஹைதராபாத் நிஜாம் கல்வி கற்க வரும் இந்து மாணவர்களுக்கு உருது கற்பிக்க வைத்து தெலுங்கு மொழியை அழித்து
மாணவர்களை முழு அளவில் மதம்
மாற்றும் வேலைகளை செய்து கொண்டு இருந்தார்.

உடன்படாத இந்துக்களை நிஜாமின் கூலிப் படையான ரசாக்கர்கள் அடித்து கொன்றும் ஹைதராபாத்தை விட்டு துரத்தி் விட்டுக் கொண்டு இருந்தார்கள்.
.
ரசாக்கர்களின் கொடுமை தாங்க முடியாமல் ஆயிரக் கணக்கான இந்துக்கள் ஹைதராபாத்
எல்லையைக் கடந்து இந்தியாவின் ஏனைய பகுதிகளில் தஞ்சம் அடைந்தார்கள்.

ஆனால் அதே நேரத்தில் வேறு பகுதிகளில் இருந்து முஸ்லிம்கள் ஹைதராபாத் முஸ்லிம்களுக்கே சொந்தம் என்று ஹைதராபாத் நோக்கி வந்தார்கள் அவர்களுக்கு உடனடியாக அரசு வேலையும் நிரந்தரமாக தங்குவதற்கு வீடுகளும் வழங்கப்பட்டது.
இந்த காலத்தில் மட்டும் ஹைதராபாத்தில் குடியேறிய முஸ்லிம்கள் மட்டும் சுமார் ஒரு லட்சம் இருக்கும்.

ஹைதராபாத் முஸ்லிம் நாடு எங்களை இந்தியாவால் அடக்கி ஆள முடியாது என்கிற முஸ்லிம்களின் கோசமே ஹைதராபாத் முழுவதும் எதிரொலிக்க ஆரம்பித்தது.

இதனால் கடுப்பான படேல் நேருவிடம் ஹைதராபாத்
மீது ராணுவ நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்று உறுதியாக நின்றார்

ஆனால் அவசரம் வேண்டாம் பொறுமை காப்போம் என்று படேல் கைகளை கட்டிப்போட்டார்

இந்தியன் எக்ஸ்பிரஸில் கையாலகாகதவர் என விமர்சனம் செய்ய வைத்தார் அவ்வாறு விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளாத நேரு கடைசியில் பொறுப்பை பட்டேலிடம் தந்தார்
சுமார் 2 மாதம் பொறுமை காத்து வந்த படேல் கடைசியில் வேறு வழியின்றி,1948ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி ஹைதராபாத் சமஸ்தானத்தை கைப்பற்ற இந்திய ராணுவத்தை அனுப்பினார்

இந்த நடவடிக்கைக்கு'ஆபரேஷன் போலோ' என்று இந்திய ராணுவம் பெயர் வைத்தது இந்த பெயர் காரணத்திற்கும் ஒரு முக்கிய பின்னணி உண்டு
அந்த காலத்தில் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான போலோ விளையாட்டு மைதானங்கள் ஹைதராபாத்தில் இருந்தது

நிஜாம்கள் பொழுது போக்குவதற்கு 17 போலோ மைதானங்கள் ஹைதராபாத்தில் மட்டும் இருந்தது என்றால் பார்த்து கொள்ளுங்கள் அதனால் ஹைதராபாத்தை உலகின் போலோ கிரவுண்ட் என்று மேலை நாடுகள் அழைத்து வந்தன.
ஐந்து நாட்கள் மட்டுமே நீடித்த ஆபரேஷன் போலோவில் ஹைதராபாத் சமஸ்தானத்தின்
கூலிப்படையான ரசாக்கர்கள் சுமார் 1500 பேர் கொல்லப்பட்டார்கள் அது மட்டுமல்லாது ஹைதராபாத் அரசின் தரப்பில சுமார 1300 பாதுகாவலர்களும் உயிரிழந்தார்கள்
இந்திய ராணுவத்தின் தரப்பில் 66 வீரர்கள் உயிரிழந்ததாகவும்
97 பேர் காயமடைந்ததாகவும் இந்திய
ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே பாகிஸ்தானில் முகமது அலி ஜின்னா காலமாகி விட்டதால் ஹைதராபாத்தை முன் வைத்து இந்தியா பாகிஸ்தான் இடையே ஒரு முழு அளவிலான
போர் நிகழாமல் போய் விட்டது.
இந்த ஆப்பரேசன் போலோ நடைபெறும் பொழுது காஷ்மீர்க்காக இந்தியாவும் பாகிஸ் தானும் காஷ்மீரில் சண்டை போட்டுக் கொண்டு இருந்தார்கள்.

இதனால் பாகிஸ்தான் ஆயுதங்கள் வாங்குவதற்கு ஹைதராபாத் நிஜாம் உஸ்மான் அலிகானிடம் 20 கோடி ரூபாய் கடன் கேட்டு இருந்தது.
நிஜாமும் பாகிஸ்தானுக்கு 20 கோடி ரூபாயை கட்டி வைத்து காத்து கொண்டிருக்க சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்து பணத்தை மட்டும் அல்ல ஹைதராபாத் சமஸ்தானத்தையே கைப்பற்றியது

இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் ஹைதராபாத் 1948 செப்டம்பர் 18 ம் தேதி வந்தது.
ஹைதராபாத் ராணுவ தளபதி ஜெனரல் எல்.எட்ரூஸ் இந்திய படைக்கு தலைமை தாங்கி ஆப்பரேசன் போலோவை நடத்தி ஹைதராபாத்தை கைப்பற்றிய மேஜர் சவுத்ரியிடம் ஒப்படைத்தார்.

ஹைதராபாத் இந்தியாவின் கைக்கு வந்தவுடன் ரசாக்கர்கள் படை கலைக்கப்பட்டு மஸ்ஜில் இட்டே ஹதுல் முஸ்லிமின் அமைப்பு தடை செய்யப்பட்டது.
காசிம் ரிஸ்வியை கைது செய்த இந்திய ராணுவம் நேருவின் கட்டளைக்கு ஏற்ப விட்டுக் காவலில் வைத்து அழகு பார்த்தது.

காசிம் ரிஸ்வியை எப்படியாவது சிறைக்குள் தள்ள வேண்டும் என்கிற பட்டேலின். முயற்சி கடைசி வரை நேருவிடம் எடுபடவே இல்லை.
ஆனால் மக்கள் விடவில்லை காசிம் ரிஸ்வியை கொலை செய்ய முயற்சித்ததால் வேறு வழியின்றி அவனை சிறையில் அடைத்து வைத்து ஒரு நல்ல நாள் பார்த்து பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார் நேரு.

ஹைதராபாத்தை இந்தியாவோடு இணைத்த பட்டேல் இல்லை என்றால் நவீன இந்தியாவே இல்லை என்று கூறலாம்.
இரண்டு லட்சம் ரசாக்கர்கள் என்னிடம் இருக்கிறார்கள் முடிந்தால் வாருங்கள் மோதி பார்ப்போம் என்று இந்தியாவிடம் சவால் விட்ட நிஜாம் உஸ்மான் அலிகானின் சவாலை ஏற்று எண்ணி 100 மணி நேரத்தில் 2 லட்சம் ரசாக்கர்களை ரசகுல்லாவாக பாரசல் செய்த இந்திய ராணுவத்திற்கு தலை வணங்கி சல்யூட் அடிப்போம்.
இந்த ஆப்பரேசன் முடிந்த பிறகு ஹைதராபாத்துக்கு சென்ற படேலை நிஜாம் உஸ்மான் அலிகான் வணங்கி நின்ற காட்சி பதிலுக்கு படேல் வெற்றி புன்னகையோடு நிஜாமை பாரத்த கம்பீரம் புகைப்படம் இருக்கிறதே அட அட,

இதற்காகவே 600 அடியில் அல்ல 1000 அடியில் கூட படேலுக்கு சிலை வைக்கலாம்.

நன்றி வணக்கம்🙏
#SSR

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SSR

SSR Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SSR_Sivaraj

31 Oct
PUBG Ban பன்னின உடனே Free Fireக்கு Addict ஆகிட்டாங்க office, வீடு ஏன் கோயில்ல கூட ஆடிட்டு இருக்கானுவ இந்த 2K கிட்ஸ்

Recharge வேற நான் Net Pack னு நினைச்சா Game விளையாட தனி Recharge பன்றாங்க

80's & 90's கிட்ஸ் விளையாண்ட விளையாட்டு எல்லாம் அறிவு சம்பந்தபட்டது.

ஆதாரம் 👇👇
பல்லாங்குழி
தாயம்
Read 16 tweets
22 Oct
கருணாநிதியின் ஊழல்கள் (பகுதி-3)

கருணாநிதியின் ஊழல்கள் ( பகுதி 2 )எழுதி மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் உங்கள் ஆதரவுடன் பகுதி-3

1997 ஆம் ஆண்டில் 450 கோடி ஊழல் பகுதி 3ல் பார்க்கலாம் என முடித்திருந்தேன் அதிலிருந்து தொடரலாம்.

#SSRThreads
#திருட்டு_திமுக
இதற்க்கு தலைப்பு கருணாநிதியின் ஊழல்கள் என்பதை விட அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து தளபதி ஸ்டாலினின் ஊழல்கள் என்பது பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து தரேட் முடிவில் நீங்களே உணர்வீர்கள்,

சரி தரேட்டுக்குள் செல்லலாம் கருணாநிதியின் பரிணாம வளர்ச்சி அடுத்த தளம் நோக்கி விரையும்
வேகம் விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்த தந்தைக்கு பிறகு ஊழலின் உன்னதத்தையே நோக்கி வளர்ச்சி ஆகவே,

கருணாநிதி குடும்பத்தில் அனைவரைக் காட்டிலும் தமிழகத்தின் பிரதான எதிரி ஸ்டாலின் தான்.

ஸ்டாலின் வரலாற்றைக் கொஞ்சம் நாமும் நமது ஸ்டைலில் கொஞ்சமாக பிரித்து மேயலாம்,
Read 40 tweets
22 Oct
@ajpasu அண்ணனுக்காக:-

சிவன் கோயிலில் நுழைந்தவுடன் ராஜகோபுரத்தை வணங்கி விட்டுத் தான் கோயிலுக்குள் நுழைய வேண்டும்.

கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும்.

எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள்

கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம்

#SSRThreads
பலிபீடம் அருகில் விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க உள்ளே செல்ல வேண்டும்.

முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கிய பின் நந்தியை வணங்கி அனுமதி பெற்ற பின்பே சிவனை வணங்க செல்ல வேண்டும்.
அடுத்து மூலஸ்தானத்தில் உள்ள சிவபெருமானை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும்.

பின் பிரகாரத்தில் உள்ள நால்வர் பெருமக்கள், 63 நாயன்மார்கள், முருகன், அம்பிகை, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோரை வழிபட வேண்டும்.

கடைசியாக ஈசனை தரிசிக்க வரும் பக்தர்களின் கோரிக்கையை கணக்கெடுக்கும்
Read 6 tweets
20 Oct
அட்டவீரட்டானம்:- (Thread)

ஸ்ரீ காலபைரவரின் அஷ்ட வீரட்டான தலங்கள்:-

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து செயல்களைப் புரியும் சிவபெருமான், தமது லீலைகளின் மூலம் பலருடைய ஆணவத்தை அடக்கி, பக்தர்களைக் காப்பாற்றியிருக்கிறார்.

#நோக்கம்சிவமயம்
#SSRThreads
குறிப்பாக பிரம்மா, அந்தகாசுரன், திரிபுர அசுரர்கள், தட்சன், ஜலந்தரன், மன்மதன், காலன், கஜமுகாசுரன் ஆகியோரின் ஆணவத்தை அடக்கி, ஆட்கொண்ட தலங்களே அட்ட வீரட்டான தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

அட்ட வீரட்டத் தலங்கள் அனைத்துமே தமிழ்நாட்டில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
1) திருக்கண்டியூர் : சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழிந்த தலம்.
ம்
2)திருக்கோவலூர் : அந்தகாகரனைக் கொன்ற இடம்.

3) திருவதிகை : திரிபுரத்தை எரித்த இடம்.

4) திருப்பறியலூர் : தக்கன் தலையைத் தடிந்த தலம்.
5) திருவிற்குடி : சலந்தராசுரனை வதைத்த தலம்.
Read 26 tweets
18 Oct
இயக்குனர் SP.முத்துராமன் பார்வையில் தலைவர் ரஜினி (Part-3)

கமலையும் ரஜினியையும் மாறி மாறி இயக்கும் வாய்ப்புகளை நான் பெற்றாலும் ரஜினியை இயக்குவதில் ஒரு உற்சாகம் பிறக்கும்.

எனது இயக்கத்தில் கமலும் ரஜினியும் இணைந்து நடித்த ஒரே படம்

"ஆடு புலி ஆட்டம்"

#SSRThreads Image
கமல் ரஜினி சேர்ந்து நடித்த படங்களில் ஒன்றை நான் இயக்கியது எனது குழுவுக்குக் கிடைத்த பெருமை.

இப்படத்தைத் தயாரித்தவர் மலையாளக் குணச்சித்திர நடிகர் சத்யனின் ஒப்பனையாளர் சாந்தி நாராயணன்.

இவர் சிறந்த ஒப்பனையாளர் மட்டுமல்ல சிறந்த சினிமா தயாரிப்பாளரும் ஆவார். Image
இப்படத்தில் கதாநாயகன் கமல். வில்லன் ரஜினி இளமை கலந்த இரண்டு திறமைசாலிகள் மோதிக்கொண்டனர்.

பி.யூ.சின்னப்பா- தியாகராஜ பாகவதர்.
சிவாஜி - எம்.ஜி.ஆர்.
அவர்கள் வழியில் கமல் - ரஜினி.

இவர்களுக்குள் போட்டி இருக்கிறதோ இல்லையோ, இவர்களின் ரசிகர்களிடம் போட்டி, மோதல் எல்லாம் உண்டு. Image
Read 26 tweets
8 Sep
#திருட்டு_திமுக வின் இந்தி திணிப்பு அரசியல்:-

மக்கள் அனைவரும் தெளிவு பெற தரேட் வடிவில் 👇👇👇👇

பிரிட்டிஷ்காரன் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தபோது 1930 களின் இறுதியில் இந்தியை தமிழகத்தில் திணிக்கும் முயற்சி நடந்தது.

நன்றி-FB,Google,Whatsapp
#SSRThreads
பிரிட்டிஷ்காரனை எதிர்த்து சுதந்திரப்போராட்டத்தில் அனைவரையும்
ஒருங்கிணைக்க இந்தியை நாடு முழுவதும் பரப்பி ஒரே தேசமாக காட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூளையில் உதிர்த்த சிந்தனை அது.

ஒரே குரலில் நாடு முழுவதும் இந்தியில்
சுதந்திரப்போராட்டக்குரல் ஒலித்தால் தேசபக்தியின்
ஒற்றுமையை காட்ட உதித்த அபாரமான யோசனை ஆனால் அந்த சிந்தனையை தென்னிந்தியாவில் எடுத்த எடுப்பிலேயே மக்கள் ஒத்துகொள்ளாமல் எதிர்த்தனர்.

தென்னிந்தியாவின் அரசியல் தலைமைப்பீடமாக திகழ்ந்த சென்னை மகாணத்தை ஆண்ட ராஜாஜி அரசாங்க பள்ளிகளில் இந்தியை கட்டாயம் படிக்கவேண்டும் என்றார்.
Read 33 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!