#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் காஞ்சி மாவட்டத்தில் உள்ள அய்யங்கார்குளம் என்ற ஊரில் தான் இந்த அதிசய கோவிலுள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு செல்லும் வழியில் காஞ்சியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் இருக்கிறது கலவை கிராமம். இங்குதான் #சஞ்சீவிராயர்_ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்து
உள்ளது. முன்புறத்தில் நெடிதுயர்ந்த தூண்களுடன் காட்சி தரும் இந்தக் கோவில் உள்ளது. சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்துக் கொண்டு ஆஞ்சநேயர் பறக்கும்போது மலையை ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாற்றினாராம். அப்போது மலையிலிருந்து ஒரு சிறு பாகம் கீழே விழ, அந்த இடத்தில் சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர்
கோயில் உருவானதாக நம்பிக்கை. 1585-1614ல் விஜயநகரை ஆண்ட வேங்கடபதி என்ற மன்னனின் அமைச்சராகப் பணி புரிந்தவர் ஸ்ரீலட்சுமி குமாரதேசிகன். அவர் ஒரு முறை ஸ்தல யாத்திரை வந்தபோது இந்த இடத்தில் தங்கினார். அப்போது அவருடைய கனவில் ஆஞ்சநேயர் வந்து அருள்பாலித்தார். எனவே அவர் இக்கோயிலை கட்டினார்.
மூலவராக சஞ்சீவிராயர் எனும் அனுமரும் இவருக்கு எதிரே ராமன், சீதை, லட்சுமணர் ஆகியோரும் அமைந்துள்ளனர். கோயிலை ஒட்டி பின்புறம் குளம் ஒன்று படித் துறையுடன் அமைக்கப் பட்டுள்ளது. விஜயநகர பேரரசின் நாயக்க மன்னரின் அமைச்சராக இருந்த எச்சூர் தாதாச்சாரியார் பொன் பொருளோடு இவ்வூர் வழியே பயணம்
செய்தபோது வழிப்பறிக்கொள்ளையரால் சூழப்பட்டார். ஆபத்திலிருந்து காக்க ராமரை வேண்டி நின்றார் எச்சூர் தாதாச்சாரியார். அப்போது கூட்டமாக வந்த குரங்குகள் கொள்ளையர்களைத் தாக்கித் துரத்தின. அதன்பின் இத்திருத்தலத்து ஆஞ்சநேயர் மீது பக்தி கொண்ட அவர் ஏதேனும் திருப்பணி செய்ய விரும்பி பிரம்மாண்ட
அளவில் 133 ஏக்கரில் குளத்தை அமைத்தார். இக்குளம் தாத சமுத்திரம் என்றும் ஐயங்கார் குளம் என்றும் புகழ் பெற்றது. இவரே ’ஸ்ரீ அனுமத் விம்சதி’ என்ற தோத்திரப் பாடலையும் இயற்றினார். இத்தலத்து அனுமரை வழிபடுவது ராமபிரானின் பாதங்களில் சரணடைவதற்கு ஒப்பானது என அப்பாடல்களில் குறிப்பிடுகின்றார்.
இந்தக் கோவிலுக்கு முன்னால் இருக்கும் குளக்கரையின் வடக்குப் பகுதியில் வாவிக் கிணறு ஒன்று உள்ளது. கிணற்றுக்குள் செல்ல படிகள் உள்ளன. கீழே சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கருங்கல்லில் அமைந்த பதினாறு கால் மண்டபம் உள்ளது. அபூர்வமான அமைப்பு இது. மிக அற்புதமான கலை அம்சம் நிறைந்த வேலைப்பாடுகள்
கொண்ட பெருமாள் கோவில் பூமிக்கடியில் உருவாக்கப்பட்டு அதற்குள் அழகிய மண்டபமும் உள்ளது. அதன் நடுவே தான் வாவிக் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் உள்ள ஊற்று வருடம் முழுவதும் பெருக்கெடுத்து வருகிறது. அதனால் இந்த கோவில் எப்போதும் தண்ணீராலேயே நிரம்பிக் காணப் படுகிறது. சித்ரா பௌர்ணமி அன்று
தண்ணீரை வெளியேற்றி விடுவார்கள். சித்ரா பௌர்ணமி திருவிழா நாளில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் பல்லக்கில் வந்து இந்த வாவிக் கிணற்றுக்குள் இருக்கும் மண்டபத்திற்குள் எழுந்தருள்கிறார். கூடவே இக்கோவில் ராம, லட்சுமண, சீதாதேவியும் இக்கிணற்றில் எழுந்தருளுவர். லட்சக் கணக்கான மக்கள் இந்த
அதிசயக் கிணற்றுக் கோவிலின் திருவிழாவிற்காக வருகிறார்கள். விழா முடிந்து ஒரு வாரம் கழித்து மீண்டும் தண்ணீர் நிரம்பத் துவங்கி விடும். இந்த நீரை முறையாகப் பாசனத்திற்கு ஏற்றம் மூலம் இறைத்துப் பயன் படுத்துகிறார்கள். இக்கோவிலின் அர்த்த மண்டபத்தின் வெளிப்புறச்சுவரில் ஆஞ்சநேயரின் 20
ஸ்லோகங்களும் கல்வெட்டுகளாக உள்ளன. வடக்குப் பார்த்த ஆஞ்சநேயர் இவர் என்பது கோயிலின் சிறப்பு. தவிர, ராஜகோபுரம் உள்ள ஆஞ்சநேயர் கோயிலும்கூட! அர்த்த மண்டபத்தின் உட்புறக் கூரையின் கீழ் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தாலும், அவை இன்று சிதிலமடைந்துள்ளன. அர்த்த மண்டபத்தி்மேற் கூரை மூலைகளில்
கருங்கல் வளையங்களைக் காணலாம். இவற்றில் மிகச்சில மட்டுமே தற்போது முழுமையாக உள்ளன. வெட்டப்பட்ட மாபெரும் குலமும் மிகவும் சுருங்கியுள்ளது. நாம் பக்தியுடன் இக்கொவில்களுக்குச் சென்று இறை அருள் பெறுவோம். பழங்கால கோவில்களை அரசர்களும் பக்தர்களும் மிகுந்த சிரமத்துடனும் பொருட் செலவுடனும்
பக்தியுடன் கட்டியுள்ளனர். அவற்றை பேணிக் காப்போம். நம் இந்து மத அதிசயங்களை உலகுக்கு எடுத்து சொல்வோம். இது நம் கடமை.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Mar 26
வீட்டில் பழுதடைந்த, உடைந்து போன அல்லது தேய்ந்து போன விக்ரகங்கள், படங்களை என்ன செய்வது?
இந்த பிரச்சினை/கேள்வி எல்லோருக்கும் இருப்பதே. பல பேர் தங்கள் வீட்டில் பின்னமான விக்ரகங்கள், படங்களை ஏதோ ஒரு கோவிலிலோ அல்லது சாலையோரத்திலோ, மரத்தின அடியிலோ போட்டுவிட்டு போய்விடுகிறார்கள். ஆனால் ImageImageImage
தெரிந்தோ, தெரியாமலோ அப்படி செய்வது மஹா பாவம். மன்னிக்கமுடியாத குற்றம்.
வீட்டில் இருந்தவரை பூஜைகள் செய்து, பிறகு அவசியம் இல்லாத போது, பாழடைந்தவற்றை உதாசீனப் படுத்தக்கூடாது. அப்படி சாலையோரத்தில் உள்ள நமது ஹிந்து தெய்வங்களின் படங்களை பார்த்து இதர மதத்தவர்கள் நம் மதத்தை குறித்து
கிண்டலும், கேலியும் செய்கிறார்கள். மற்ற மதத்தவரின் தெய்வ படங்களை அது போல் எங்காவது கண்டதுண்டா என்பதை யோசித்து பாருங்கள். தயவு செய்து நமக்கு அவசியம் இல்லாத படங்களை, விக்ரங்களை அக்னி பகவானுக்கு ஆஹுதி கொடுப்பது (சமர்பிப்பது) நல்லது. அதெப்படி ஸ்வாமி படங்களை அக்னியில் போடுவது சரிதானா Image
Read 5 tweets
Mar 26
#MahaPeriyava
Namaskaram. I am Dr.Venkataraghavan, an eye surgeon. My wife, Gayathri Venkataraghavan is a musician and both of us owe everything in life to the boundless Grace of Sri Maha Periyava. I just have an experience to share with all of you. Many years back about (12 to Image
13), a Muslim gentleman walked into my clinic. Seeing Sri Maha Periyava’s photo, he bowed in reverence and mentioned that Sri Maha Periyava is a great sage. I was surprised and asked him how he knew about Sri Maha Periyava. The Muslim gentleman shared his experience which I
shall present in the first person account as narrated to me. “Sir, I was a linesman in electricity board about 30 years back. We in a group of 5 or 6, went to the Kanchi Matham to attend to a fault. Sri Maha Periyava who was seated there, gestured me to come and queried whether I
Read 10 tweets
Mar 26
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் இறைவனின் பாதம் ஒன்றே கதி என்று நினைத்து அவனது சரணங்களை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இறைவன் நிச்சயம் நற்கதியைத்தான் அருள்வான் என்பதில் சந்தேகமே இல்லை. அப்படிப் பட்ட அந்த இறைவனின் சரணத்தைக் கெட்டியாகப் பற்ற வேண்டியது நம் கடமை. ஸ்ரீ ராமருக்கு சரணாகத Image
வத்ஸலன் என்ற ஒரு திருநாமம் உண்டு. ராமாயணத்தில் பால காண்டம் துவங்கி, யுத்த காண்டம் வரை இந்த சரணாகதி தத்துவத்தை மிகவும் அழகாய் பார்க்கலாம். #பாலகாண்டத்தில் தேவர்கள் பகவான் ஸ்ரீமன் நாராயணன் இடத்தில் சரணாகதி செய்கிறார்கள்.
#அயோத்யாகாண்டத்திலபரதன் சரணாகதி மற்றும் குகனோடு சக்யம்.
#ஆரண்யகாண்டத்தில் ரிஷிகள் ராமச்சந்திர மூர்த்தியிடம் சரணாகதி செய்கிறார்கள்.
#கிஷ்கிந்தாகாண்டத்தில் சுக்ரீவன் சரணாகதி.
#யுத்தகாண்டத்தில் விபீன் சரணாகதி செய்கிறார். இதில் விபீஷண சரணாகதிக்குத்தான் தனியொரு பெருமையும், விசேஷமும் இருக்கும். சரணாகதி லட்சணம் என்பது பரிபூர்ணமாக இருந்தது
Read 9 tweets
Mar 25
ஸ்ரீரங்கம் #நம்பெருமாள் பெயர் வர காரணம் -
வைகாசி 17, வைஷ்ணவர்களின் வாழ்வில் மிக முக்கியமான ஒரு நாள். அரங்கன் 48 ஆண்டுகள் வனவாசம் சென்று திரும்பி வந்த நாள்! இஸ்லாமிய ஆட்சி இந்தியாவில் ஏற்பட்ட போது, 12 ஆம் நூற்றாண்டில் இந்துகளின் கோவில்களும் கோவில் சொத்துக்களும் அவர்களால் பெருமளவு ImageImageImage
சூறையாடப்பட்டன. மதுரை, ஸ்ரீரங்கம் என பிரசித்தி பெற்ற பல கோவில்கள் தாக்கப்பட்டு அங்கிருந்த விக்ரகங்கள் மற்றும் பெரும் செல்வங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. 1310 ஆம் ஆண்டு படையெடுப்பின் போது, திருவரங்கத்தின் உற்சவர் அழகிய மணவாளன் கவர்ந்து செல்லப்பட்டார். உள்ளூர் பெருமக்கள், கரம்பனூர் Image
பின்சென்றவல்லி மற்றும் அரையர்கள் ஆகியோர் 8 ஆண்டுகள் முயற்சிகள் பல செய்து டெல்லி வரை சென்று அழகிய மணவாளனை மீட்டு வந்தனர் ஆனால், 1323 ஆம் ஆண்டு இஸ்லாமிய படையெடுப்பின் போது, பிள்ளை லோகாச்சாரியார் என்கிற வைணவப் பெரியவர் மூலவர் ரங்கநாதரையும், ரங்கநாயகியையும் சுவர் எழுப்பி மறைத்து
Read 17 tweets
Mar 25
ஏன் #நாலு #நான்கு என்கிற எண்ணிக்கை/சொல் விசேஷம்?
நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க.
நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்ல.
நாலு காசு சம்பாதிக்கவாது படிக்கணும்ல.
நாலு ஊரு சுற்றினாதான் உலகம் புரியும்.
அவரு நாலும் தெரிஞ்சவரு, நாலும் புரிஞ்சவரு.
நாலு வார்த்த நறுக்குன்னு Image
கேக்கணும்.
நாலு பேருக்கு நன்றி.
இப்படி நாலுக்கு ஏக மரியாதை! இந்த நாலு வேறு எங்கெல்லாம் வருகிறது என்று பார்ப்போம்.
சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்கணக்கு நூல்களில் பெயருடன் நான்கு சேர்ந்து வரும். சில நாலு நாற்பது மற்றும் எட்டுத் தொகையில் நானூறு, பிரபந்தத்தில் நாலாயிரம் என 4 வரும். Image
“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்” ஔவையாரின் நால்வழி நீதி நூலில் கடவுள் வாழ்த்து பாடல்.
நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, அக நானூறு, புற நானூறு, நாலாயிர திவ்ய பிரபந்தம்!
தவிர சொலவடை, நாலும் இரண்டும் சொல்லுக்கு ImageImageImageImage
Read 11 tweets
Mar 24
தமிழுலகின் மிகப் பிரபலமான பின்னணி இசை, மெல்லிசைப் பாடகர் திரு #டிஎம்சௌந்தரராஜன் #TMS பிறந்த நாள் மார்ச் 24 1922. இன்று அவரின் நூறாவது பிறந்த நாள். இசைத் துறையில், கோலிவுட்டில் அவரை பாராட்டும் கொண்டாட்டம் ஏதும் உள்ளதா? தமிழக அரசு இந்தத் தமிழருக்கு (பிறந்தது மதுரை, சௌராஷ்டிரர்
என்றாலும் தமிழ் அவருக்குத் தாய் மொழி போலத் தான்.) விழா எடுக்க வேண்டும். மதுரை வரதராஜப் பெருமாள் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றியவர் டி.எம்.எஸ்ஸின் தந்தை மீனாட்சி அய்யங்கார். இவர் கர்நாடக இசையை முறையாக பயின்றவர். கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் ராதே
என்னை விட்டுப் போகாதேடி தான் இவரின் திரையுலக முதல் பாடல். நீளமான குடுமியும் வடகலை நாமமும் டி.எம்.எஸ்ஸின் ஆதி கால அடையாளம். சினிமாவில் வாய்ப்புத் தேடும் பொருட்டு கோயம்புத்தூர் வருவதற்கு முன் இதே கோலத்தில் தன்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு விட்டு குடுமியை எடுத்துவிட்டுக் கிராப்
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(