SSR Profile picture
11 Nov, 29 tweets, 5 min read
அட்டமாசித்தி:- (Thread)

சித்தம் அறிந்தவர்கள் சித்தர்கள் மனதின்ஆற்றலை உணராதவர்கள் சராசரி மனிதர்கள்.

மனம் எனும் மகா சக்தியின் ஆற்றலை முழுமையாக கண்டு உணர்ந்து
பயன்படுத்தியவர்கள் சித்தர்கள் ஆயினர்.

சித்தி என்றால் கைகூடுதல் என்று பொருள்.

#SSRThreads
அதாவது சித்தத்தின் ஆற்றலால் வேண்டும் செயலை செய்யும் அற்புதங்களை பெறுதல்

யோகக் கலையை சாதனம் மாக்கி அதன் பலனாக பலவித ஆற்றல்களை சித்தர்கள் பெற்றனர் அவற்றுள் மிக முக்கியமான எட்டு சித்திகளே அட்டமா சித்திகள்.

இந்த எட்டினுள் அணிமா, மகிமா, லகிமா ஆகிய மூன்றும் உடலால் எய்தும் சித்திகள்
கரிமா, ப்ராப்தி, பிரகாம்யம். ஈசத்துவம், வசித்துவம் ஆகிய ஐந்தும் மனதால் எய்தும் சித்திகள்.

இந்த அட்டமா சித்திகளும் ஒருவருக்குக் கைகூட வேண்டுமானால் பன்னிரண்டு ஆண்டுகள் கடும் தவம் இயற்ற வேண்டும் என சித்தர்கள் கூறியிருக்கின்றனர்.

தாரனை, தியானம், சமாதி இம்மூன்றையும் சேர்த்து
ஒருமுகப்படுத்திப் பயில்வது சம்யமம் என்று அழைக்கப்படுகிறது.

ஐம்புலன்களையும் அடுக்கி அவற்றின் உணர்ச்சிகளை வெளியே செல்லாமல் அடக்கி வைப்பது தாரணை என்னும் பயிற்சி.

இந்த தாரணை நிலையை கொஞ்சம் மேம்படுத்தி மனதை ஒரு நிலைப்படுத்தி எண்ணமும் செயலும் ஒரு முகப்படுத்தப்படுவதே தியானம்
இந்த தாரணை மற்றும் தியானம் பெற்ற நிலையில் இறைவன் காட்சி புலனாகும் விதமே சமாதி என்னும் சம்யயோக நிலையாகும்.

இந்த ஒரு முகப்படுத்தும் பயிற்சியையே சித்தர்கள் தாங்கள் அடையும் சித்திகளுக்கெல்லாம் முதற்படியாக கொண்டனர்.

எட்டு சித்திகளுள் முதலாவது அணிமா.
இந்த சித்தியால் அணுவைப்போல் சிறியதாக தேசத்தை ஆக்கிக்கொள்ள இயலும்.

அனுமன் சிம்ஹிகி எனும் அரக்தியின் வாயினுள் புகுந்து வெளிப்பட்டதை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இலங்கை சென்றபோது சின்னஞ்சிறு வடிவம் எடுத்து அவர் உலவியதும் இந்த வல்லமையால் தான்.
விசுவாமித்திர மகரிஷி அணிமாசித்தி பெற்றதால் தான் பிரபஞ்ச முழுவதும் பரவிய தம் மனத்தால் பிரபஞ்ச அணுக்களை கூட்டி ஒருங்கிணைந்து சந்திரன், சூரியன் முதலிய கோள்களை படைக்க தொடங்கினார்.

வாயு மீதான ஆளுமையினால் பூமியிலிருந்து கிளம்புதல்,ஆகாயத்தில் உலாவுதல்,நீர் மேல் நடத்தல்,
முள்ளில் படுத்தல் போன்ற அபூர்வமாக செயல்களை செய்திருக்கின்றனர் சித்தர்கள்.

வள்ளலார் சுவாமிகள் பூட்டப்பட்டிருந்த அறைக்குள்ளிருந்து வெளியேறியது இந்த சித்தியினால் தான். போகர், புலிப்பாணி சித்தர், யாகோபு சித்தர் போன்றோர் ஆகாய மார்க்கமாக பல தேசங்கள் சென்றதாக வரலாறு உண்டு.
நம் உடலானது பஞ்ச பூதங்களின் ஒருங்கிணைப்பால் உருவானது பிராண அணுக்களை கட்டுப்படுத்துவது பெரிய ஆற்றலாகும்.

இதன் மூலம் உணர்விழந்த பகுதிகளை உயிர் பெற செயயலாம்.

துவண்ட மூளையை நிலைக்க செய்யலாம்.

நோய்கள் அண்டாமல் மரணத்தை வென்று வாழலாம்.
அணிமா என்னும் இந்த ஒரு சித்தியே
ஏறத்தாழ எல்லா சக்திகளையும் பெற வைத்துவிடம்.

இந்த ஆற்றலினால் வானம் மட்டுமல்ல ஞானமும் வசப்படும் அதனால் இதை ஆதார சக்தி என்றே சொல்லலாம்.

இரண்டாவது மகிமா- பெயரைப் போலவே மகிமை மிக்க ஆற்றல் இது. இச்சக்தி கைவரப் பெற்றால் எல்லையில்லாமல் விரிந்து படரும் ஆற்றல் உண்டாகும்.
கிருஷ்ணபரமாத்மா விஸ்வரூப தரிசனம் எடுத்து மண்ணுக்கும் விண்ணுக்குமாக நின்றது இந்த மகிமா ஆற்றலால் தான்.

அனுமன் விஸ்வரூபம் எடுத்து இலங்கையை அழித்தது இதே சக்தியினால் தான்.

மகிமா சித்தியால் பேராற்றல் கைகூடும் விண்ணுக்கும் மண்ணுக்குமான ஜோதி வடிவாக நின்ற ஈசனே இதனை அறிந்த முதல் சித்தன்.
மூன்றாவது - கரிமா சித்தி.

லேசான பொருளை மிகவும் எடையுள்ள பொருளாக மாற்றுவது நமது உடலில் உள்ள பிரதான வாயுக்கள் பிராணணன், அபானன், உதானன், வியானன், சமானன் ஆகியவை. இவை உடலில் ஐந்து இடங்களில் இருந்து கொண்டு தம் வேலையைச் செய்கின்றன.
இந்த வாயுக்களுக்கு துணை வாயுக்களாக நாகன்,கூர்மன்,கிரிகரன்,தேவதத்தன், தனஞ்செயன் எனும் வாயுக்கள் இயங்கி வருகின்றன

இதில் நாகன் எனும் வாயு உடலியக்கங்களில் சமநிலைக்கும் நிதானத்திற்கும் காரணம் நாகன் வாயுவை கட்டுப்படுத்த யோகிகள் அறிந்திருந்தனர் மூச்சால் உடலை இறுக்கிகொள்ளும் பயிற்சி இது
கரிமாசித்தி இதைப்போல பலநூறு மடங்கு ஆற்றலைத் தருவது.

இந்த சித்தியினை அடைந்தவர், கற்பாறை போல தரையோடு தரையாக படுத்தக் கொண்டு புயல், இடி, பூகம்பம் வந்தால் கூட அசையாதிருப்பர். உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் ஓடும் சகல நாடிகளும் ஓர் இடத்தில் சங்கமிக்கும்.
நாபிக்கு அருகில் இருக்கும் அந்த முடிச்சே கண்டமூலமாகும் கண்ட மூலத்தை தியானம் செய்தால் உடலில் எங்கும் பரவி நிற்கும் நாகன் வாயுவை கட்டுப்படுத்தி ஆளுமை செய்யலாம்.

பிராணாயாமத்தை முழுமையாகச் செய்து பிரபஞ்ச சக்தியை எழுப்ப முடியும்.
அதன் பின்பு மூச்சின் மையமான பிராணனை சூட்சும்னா நாடிக்குள் செலுத்துவதன் மூலம் அட்டமா சித்திகளையும் அடையமுடியும்.

நான்காவது - லகிமா எனும் சித்தி.

இலகு என்றால் லேசான என்று அர்த்தம் இலகிமா சித்தியினை அடைந்தால், கனமான பொருளை லேசாக மாற்ற இயலும் அபானன் எனும் வாயு,
உடலின் கீழ்ப்பகுதிக்கு அழுத்தம் ஏற்படுத்தக்கூடியது.

உதானன் வாயுவானது உடலின் மேல் பகுதியில் இருந்து கொண்டு மேல்நோக்கியே நகரக்கூடியது இந்த உதானன் வாயுவை வெற்றி கொண்ட சித்தர்கள் நீர்மீது நடக்கிறவர்களாகவும், முள்மீது நிற்பவராகவும், ஆகாயத்தில் உலாவுபவராகவும் வல்லமை பெறுகிறார்கள்.
சித்தர்கள் ஆகாயத்தில் சஞ்சரிக்க எண்ணும்போது, பஞ்சபூதங்களுள் ஒன்றான நிலத்தை தியானப் பொருளாக சம்யமம் செய்து தங்கள் மனத்தை ஒருமுகப்படுத்தி கிடைத்த வெற்றியால் ஆகாயத்தை நிலப்பரப்பாக உணர்ந்து மடமடவென நடந்து செல்வார்கள். காலாங்கிநாதர் சீன நாட்டுக்குச் சென்று வந்ததும்,
அடிக்கடி உலக சஞ்சாரம் செய்து அதிசயங்கள் உணர்ந்து சீன மக்களுக்கு அவற்றை எடுத்துச் சொல்ல முடிந்ததும், இந்த லகிமா சக்தியால் தான்.

கொங்கணவர், கருவூரார், சுந்தரானந்தர் போன்ற சித்தர்களும் ஆகாய மார்க்கமாக சீன நாட்டுக்குச் சென்று காலாங்கிநாதர் சமாதியை தரிசித்ததாகக் கூறுவர்.
அகத்திய மாமுனி ஆகாயமார்க்கமாகப் பறந்து வடநாட்டிலிருந்து தென் தமிழ்நாடு வந்து தமிழைப் பரப்பியதும், வைத்திய நூல்கள் அருளியதும் லகிமா ஆற்றலினால் தான்.

ஐந்தாவது- பிராப்தி சித்தி.

ஒருவர் நினத்ததெல்லாம் நடந்துவிட்டால் வேண்டியனவெல்லாம் அவருக்குக் கிடைத்துவிட்டால்
அவருக்கு பிராப்தி என்பது சித்தியாகிவிட்டது என்று பொருள்.

பிராப்தம் இருந்தால் கிடைக்கும் என்று பெரியவர்கள் சொல்வது இதைத்தான். பிராப்தி என்னும் சித்தி அடைந்தவர்கள் தங்களது கர்மவினைகளை கூட தீர்த்துக் கொள்ள முடியும். சிதம்பரத்தில் நடைபெற்ற ஆனித் திருமஞ்சனக் காட்சியை ராமலிங்க அடிகள்
இருந்த இடத்தில் இருந்தே கண்ட நிகழ்ச்சியை இந்த சித்திக்கு உதாரணமாகக் கூறலாம்.

ஆறாவது- பிராகாம்ய சித்தியை அறிந்தவர், விரும்பும் உருவத்தை எடுத்துக் கொள்ள முடியும். அதோடு, நினைத்த இடத்திற்கு நொடியில் சென்று சேரமுடியும். அவ்வையார் இளம் வயதிலேயே முதுமையான தோற்றத்தைப் பெற்றதும்,
காரைக்கால் அம்மையார் தன் அழகான பெண்ணுருவை மாற்றிப் பேய்வடிவம் பெற்றதும் பிரகாம்யம் என்னும் சித்தியால் தான்.

ஏழாவது சித்தி- ஈசத்துவம்

ஈஸ்வரனுக்கு சமமான ஆற்றல் பெறுவதாகும். இந்த சித்தி கைவரப் பெற்ற சித்தர்கள் படைத்தல், காத்தல், அழித்தல் என உடம்பின் கண் செய்யப்படும்
முத்தொழில்களையும் எளிதாக செய்யும் வல்லமையுடையவர் ஆவார்.

கண்ணன் வாய்க்குள் ஈரேழு பதினான்கு உலகங்களையும் யசோதைக்கு காட்டியது அவனது ஈசத்துவ சக்தியால்தான்.

ஒரு சமயம், நவகிரகங்களின் அமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தினால் பூமியில் மழை பொய்த்து கடும் பஞ்சம் நிலவியது.
அப்போது இடைக்காடர் சித்தர் நவகிரகங்களையும் இடம் மாற்றி வைத்து மழை பெற்றச் செய்து பஞ்சத்தை போக்கினார். திருஞான சம்பந்தர், பாம்பு தீண்டி இறந்த பூம்பாவை என்ற பொண்ணுக்கு உயிர் கொடுத்து எழுப்பியது அவர் பெற்றிருந்த ஈசத்துவ சித்தியால் தான்.
எட்டாவது- வசித்துவ சித்தி.

தேவர்கள், மானிடர், அசுரர், விலங்குகள், பறப்பன, ஊர்வன, தாவரங்கள் முதலிய ஏழுபிறப்பையும் தன்வசப்படுத்தும் ஆற்றலே வசித்துவம் எனும் சித்தியாகும். திருநாவுக்கரசர் தன்னைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமபிரான் ஆலமரத்திலிருந்து
ஒலி செய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும், வசித்துவம் என்னும் சித்ததால்தான் எனலாம்.

மெய்யான சித்தர்கள் பெற்றிடும் தெய்வ ஆற்றல்கள் குறுகியகாலத்திற்கு குறளிவித்தைகளோ, மந்திர ஜாலங்களோ கிடையாது.

அவை நிலைத்திருந்து மற்றவர்களை வழிநடத்தும் ஆற்புத சித்துக்கள்.
சித்தர்களால் அறிந்து அறிமுகப்படுத்தப்பட்ட இத்தகைய சித்திகள் அனைத்தும் சிவபெருமானால் உபதேசித்து அருளப்பட்டவையே.

எனவே அவரே முதல்சித்தர்.

இந்த சித்திகள் அனைத்தும் பூவுலகில் பட்டமங்கை தலத்தில் முதன்முதலில் உபதேசிக்கப்பட்டது.
ஆதலால் சித்தர்களின் தலைவாசல் என்பதும் திருவிளையாடல் புராணத்தினால் உறுதி செய்யப்படுகிறது.

நாளை முதல் #தினம்_ஒரு_திருமந்திரம் டேக் கில் 71 நாட்களுக்கு அட்டமாசித்தி பற்றிய பதிவுகள் சிவ தரிசனத்துடன்.

நன்றி வணக்கம் 🙏
#SSR

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SSR

SSR Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SSR_Sivaraj

1 Nov
சர்தார் வல்லபாய் படேல்:-(Thread)

இந்தியாவின் முதல் துணை பிரதமர் ,உள்துறை அமைச்சர் என இரு பதவி வகித்த இவருக்கு போய் ரூ.3000 கோடி செலவு செய்து 182 மீட்டர் (600 அடி) உலகின் உயரமான சிலையை குஜராத் அரசாங்கம் அமைத்தது என பிரதமர் மோடியை நானே திட்டிருக்கேன்.

#SSRThreads
#JaiHind
பட்டேலுக்கு நேற்று பிறந்தநாள் அவருடைய வரலாறு படித்தபின் இதுபோல் அனைத்து மாநிலத்திலும் வைத்தாலும் தப்பில்லை என தோன்றியது

இந்த திரேட் படித்தபின் உங்களுக்கும் தோன்றினால் நீங்களும் தேசப்பற்றுள்ள இந்தியரே

இன்றைய தலைமுறைக்கு சர்தார் வல்லப்பாய் படேலைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை
இந்தியா விடுதலை அடைவதற்கு அவர் ஆற்றிய செயற்கரிய செயல்களும், விடுதலை பெற்ற இந்தியாவின் நன்மைக்கு அவர் முன்னெடுத்து செய்த ஒப்பற்ற காரியங்களும், இரும்பு மனிதர் என்று அவருக்கு வழங்கப்பட்டபெயருக்கான காரணத்தையும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சர்தார் வல்லபாய் படேல் லேவா படேல்
Read 30 tweets
31 Oct
PUBG Ban பன்னின உடனே Free Fireக்கு Addict ஆகிட்டாங்க office, வீடு ஏன் கோயில்ல கூட ஆடிட்டு இருக்கானுவ இந்த 2K கிட்ஸ்

Recharge வேற நான் Net Pack னு நினைச்சா Game விளையாட தனி Recharge பன்றாங்க

80's & 90's கிட்ஸ் விளையாண்ட விளையாட்டு எல்லாம் அறிவு சம்பந்தபட்டது.

ஆதாரம் 👇👇
பல்லாங்குழி
தாயம்
Read 16 tweets
22 Oct
கருணாநிதியின் ஊழல்கள் (பகுதி-3)

கருணாநிதியின் ஊழல்கள் ( பகுதி 2 )எழுதி மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் உங்கள் ஆதரவுடன் பகுதி-3

1997 ஆம் ஆண்டில் 450 கோடி ஊழல் பகுதி 3ல் பார்க்கலாம் என முடித்திருந்தேன் அதிலிருந்து தொடரலாம்.

#SSRThreads
#திருட்டு_திமுக
இதற்க்கு தலைப்பு கருணாநிதியின் ஊழல்கள் என்பதை விட அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து தளபதி ஸ்டாலினின் ஊழல்கள் என்பது பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து தரேட் முடிவில் நீங்களே உணர்வீர்கள்,

சரி தரேட்டுக்குள் செல்லலாம் கருணாநிதியின் பரிணாம வளர்ச்சி அடுத்த தளம் நோக்கி விரையும்
வேகம் விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்த தந்தைக்கு பிறகு ஊழலின் உன்னதத்தையே நோக்கி வளர்ச்சி ஆகவே,

கருணாநிதி குடும்பத்தில் அனைவரைக் காட்டிலும் தமிழகத்தின் பிரதான எதிரி ஸ்டாலின் தான்.

ஸ்டாலின் வரலாற்றைக் கொஞ்சம் நாமும் நமது ஸ்டைலில் கொஞ்சமாக பிரித்து மேயலாம்,
Read 40 tweets
22 Oct
@ajpasu அண்ணனுக்காக:-

சிவன் கோயிலில் நுழைந்தவுடன் ராஜகோபுரத்தை வணங்கி விட்டுத் தான் கோயிலுக்குள் நுழைய வேண்டும்.

கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும்.

எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள்

கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம்

#SSRThreads
பலிபீடம் அருகில் விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க உள்ளே செல்ல வேண்டும்.

முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கிய பின் நந்தியை வணங்கி அனுமதி பெற்ற பின்பே சிவனை வணங்க செல்ல வேண்டும்.
அடுத்து மூலஸ்தானத்தில் உள்ள சிவபெருமானை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும்.

பின் பிரகாரத்தில் உள்ள நால்வர் பெருமக்கள், 63 நாயன்மார்கள், முருகன், அம்பிகை, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோரை வழிபட வேண்டும்.

கடைசியாக ஈசனை தரிசிக்க வரும் பக்தர்களின் கோரிக்கையை கணக்கெடுக்கும்
Read 6 tweets
20 Oct
அட்டவீரட்டானம்:- (Thread)

ஸ்ரீ காலபைரவரின் அஷ்ட வீரட்டான தலங்கள்:-

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து செயல்களைப் புரியும் சிவபெருமான், தமது லீலைகளின் மூலம் பலருடைய ஆணவத்தை அடக்கி, பக்தர்களைக் காப்பாற்றியிருக்கிறார்.

#நோக்கம்சிவமயம்
#SSRThreads
குறிப்பாக பிரம்மா, அந்தகாசுரன், திரிபுர அசுரர்கள், தட்சன், ஜலந்தரன், மன்மதன், காலன், கஜமுகாசுரன் ஆகியோரின் ஆணவத்தை அடக்கி, ஆட்கொண்ட தலங்களே அட்ட வீரட்டான தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

அட்ட வீரட்டத் தலங்கள் அனைத்துமே தமிழ்நாட்டில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
1) திருக்கண்டியூர் : சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழிந்த தலம்.
ம்
2)திருக்கோவலூர் : அந்தகாகரனைக் கொன்ற இடம்.

3) திருவதிகை : திரிபுரத்தை எரித்த இடம்.

4) திருப்பறியலூர் : தக்கன் தலையைத் தடிந்த தலம்.
5) திருவிற்குடி : சலந்தராசுரனை வதைத்த தலம்.
Read 26 tweets
18 Oct
இயக்குனர் SP.முத்துராமன் பார்வையில் தலைவர் ரஜினி (Part-3)

கமலையும் ரஜினியையும் மாறி மாறி இயக்கும் வாய்ப்புகளை நான் பெற்றாலும் ரஜினியை இயக்குவதில் ஒரு உற்சாகம் பிறக்கும்.

எனது இயக்கத்தில் கமலும் ரஜினியும் இணைந்து நடித்த ஒரே படம்

"ஆடு புலி ஆட்டம்"

#SSRThreads Image
கமல் ரஜினி சேர்ந்து நடித்த படங்களில் ஒன்றை நான் இயக்கியது எனது குழுவுக்குக் கிடைத்த பெருமை.

இப்படத்தைத் தயாரித்தவர் மலையாளக் குணச்சித்திர நடிகர் சத்யனின் ஒப்பனையாளர் சாந்தி நாராயணன்.

இவர் சிறந்த ஒப்பனையாளர் மட்டுமல்ல சிறந்த சினிமா தயாரிப்பாளரும் ஆவார். Image
இப்படத்தில் கதாநாயகன் கமல். வில்லன் ரஜினி இளமை கலந்த இரண்டு திறமைசாலிகள் மோதிக்கொண்டனர்.

பி.யூ.சின்னப்பா- தியாகராஜ பாகவதர்.
சிவாஜி - எம்.ஜி.ஆர்.
அவர்கள் வழியில் கமல் - ரஜினி.

இவர்களுக்குள் போட்டி இருக்கிறதோ இல்லையோ, இவர்களின் ரசிகர்களிடம் போட்டி, மோதல் எல்லாம் உண்டு. Image
Read 26 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!