#Thread

திருத்தணி மேடையில் கழகத் தலைவர் @mkstalin அவர்களிடம் தரப்பட்ட ‘வேல், இன்று பேசும் பொருளாகி விட்டது.! வேலோடு முருகன் திடீரெனத் தோன்றி தரிசனம் தந்திருந்தால் கூட இவ்வளவு பெரிய படத்தோடு முதல் பக்கச் செய்தியாக ‘தினமலர் வெளியிட்டிருக்குமா.? - என எண்ணிடும் வகையில்,..

1/n
கழகத் தலைவர் வேலோடு காட்சி தரும் படத்தை பெரிய அளவில் போட்டு, முருகனை தரிசிக்கும் அவரது பக்தர்கள் பக்திப் பரவசத்தோடு முழக்கமிடும் 'அரோகரா' எனும் கோஷத்தை, அதாவது, 'துன்பங்களை நீக்கி நற்கதியை அருள்க.!' எனும் பொருள் பொதிந்த வாசகத்தை தலைப்பாக வெளியிட்டிருந்தது.!

2/n
நமது தமிழக #பிஜேபி காரர்களும் அதனைப் பார்த்து அப்படித்தான் நினைத்திருப்பார்கள் எனக் கருதுகிறோம்.!

'அரோகரா' எனத் 'தினமலர்' கிண்டலடித்துப் போட்டிருப்பதாக அவர்கள் எண்ணியிருந்தால், நமது பி.ஜே.பி.யினர் கொதித்துப் போய், 'எப்படி முருகன் புகழ்பாடும் சொல்லை கிண்டல் செய்து போடலாம்,.

3/n
இதனைச் சும்மா விடமாட்டோம்'- என கருப்பர் கூட்டத்துக்கு எதிராக ‘வேல் யாத்திரை புறப்பட்டது போல, தினமலரை எதிர்த்து நாடு குலுங்கும் | (குலுங்கிச் சிரிக்கும்) மற்றொரு யாத்திரைக்குப் புறப்பட்டிருக்க மாட்டார்களா.?

கழகத் தலைவர் கையில் வேலைக் கண்டதும் வேல் ஏந்தி..

4/n
பகுத்தறிவுக்கு முழுக்கு”, “ஸ்டாலின் கபட நாடகமாடுகிறார்”, “தேர்தலுக்கு வேடம் கட்டுகிறார்”- என்றெல்லாம் ஒரு கூட்டம் கத்த - இதனைப் பெரிய விவாதப் பொருளாக சில ஊடகங்கள், காலை முதல் மாலை வரை விவாதித்து மகிழ்கின்றன.!

#திமுக-வைப் பொறுத்தவரை,
அது எந்த மதத்துக்கும் விரோதியல்ல ;..

5/n
மதவெறிக்கே அது எதிரி.!

கழகத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் இருக்கின்றனர், இல்லாதவர்களும் இருக்கின்றனர் #தந்தை_பெரியார் இறை நம்பிக்கை இல்லாதவர்.! தீவிர நாத்திகரான அவரே, குன்றக்குடி மடம் சென்றபோது அடிகளார் விபூதி தர, அதனைப் பெற்றுக் கொண்டார் என்பதை நாடறியும்.!

6/n
நாத்திகத்தில் இறுதிவரை உறுதியாக இருந்த கலைஞரே, மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் இறங்கி அதனைத் தூர்வாரும் நிகழ்ச்சியைத் துவக்கியதும் முதலமைச்சராக இருந்த #அறிஞர்_அண்ணா-வின் கட்டளை ஏற்று பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த #தலைவர்_கலைஞர், கும்பகோணம் சென்று மகாமகத்..

7/n
திருவிழா சீரும் சிறப்புமாக நடைபெற எல்லா ஏற்பாடுகளையும், தானே முன்னின்று நடத்தி, அப்போதைய குடந்தை சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் - பிராமண குலத்தைச் சேர்ந்த காசிராமன், அதனைப் பாராட்டிப் பெருமிதம் கொண்டதும், பலமுறை சுட்டிக்காட்டப்பட்ட சம்பவங்கள்.!

ஓடாது பல வருடங்களாக..

8/n
நிறுத்தப்பட்டுக் கிடந்த திருவாரூர் தேரை, மீண்டும் ஓட வைத்தது கலைஞர் ஆட்சிதான் என்பதை பல நேரங்களில் எடுத்துக் காட்டியிருக்கிறோம்.!

உண்மை நிலை இப்படி இருக்க, ஒரு ஊடக விவாதத் தில் கலந்துகொண்ட 'துக்ளக்' ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், திரும்பத்திரும்ப,..

9/n
தி.மு.கழக அமைச்சர் ஒருவர், தீ மிதிப்பு ஒன்றில் கலந்து கொண்டதை, அன்றைய முதல்வர் கலைஞர் காட்டுமிராண்டித்தனம் எனக் கூறியதாகக் குறிப்பிட்டார்.

அந்த நபர் 'துக்ளக்' பத்திரிக்கையையே படிப்பதில்லை போலும்; அவர் ஊடக விவாதத்தில் திரும்பத் திரும்ப எழுப்பிய அதே கேள்வியை,..

10/n
மறைந்த 'துக்ளக்' ஆசிரியர் சோ, கலைஞரிடம் எடுத்த ஒரு பேட்டியில் கேட்டார் அந்தக் கேள்வியும், அதற்கு கலைஞர் தந்த பதிலும் ஏப்ரல் திங்களில் வந்த 'துக்ளக்' இதழில் பிரசுர மாகியும் உள்ளது.!

👨‍🦲சோ கேள்வி: தீ மிதிப்பது காட்டு மிராண்டித்தனம் என்று எதற்காக வர்ணித்தீர்கள்.?

11/n
🕶கலைஞர் பதில்: தீ மிதிப்பது காட்டுமிராண்டித்தனம் என்று நான் சொல்லவில்லை. அது எத்தனையோ ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிற பழக்கம். அப்படிப்பட்ட நெடுங்கால வழக்கத்தை, நான் திடீரென்று காட்டுமிராண்டித்தனம் என்று வருணிக்க வேண்டிய அவசியமே இல்லை.!

என்னுடைய அமைச்சர் ஒருவர் அங்கு..

12/n
போய் தீ மிதித்து விட்டு, 'கலைஞர் ஆட்சி நீடிப்பதற்காக நான் இதைச் செய்தேன் என்று கூறினார். அதைத்தான் நான் காட்டுமிராண்டித்தனம் என்று சொன்னேன். என்னுடைய ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு அமைச்சர் இப்படிச் செய்ததைக் கண்டித்துதான், நான் அவ்வாறு பேசினேன்.!

13/n
தீ மிதிப்பது மட்டுமல்ல; எத்தனையோ தேர்த் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தி.மு.க. அமைச்சர்கள் போயிருக்கிறார்கள்.

மன்னை (நாராயணசாமி) அமைச்சராக இருந்தபோது, திருவாரூர் தேர்த்திருவிழாவுக்கு தான் அழைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்.கட்டாயமாகப் போய் வாருங்கள் என்று கூறினேன்.!

14/n
இவ்வாறு 🕶கலைஞர் பதில் கூற,

👨‍🦲சோ அடுத்த கேள்வியாக, அமைச்சர் என்ற முறையில், அழைக்கப்பட்டு அவர்கள் கோயில்களுக்கும், திருவிழாக்களுக்கும் சென்றால், நீங்கள் அதை ஏற்கிறீர்கள்; சரி.! சாதாரண முறையில் பக்திபூர்வமாக அவர்கள் சென்றிருந்தால், நீங்கள் ஆட்சேபித்திருப்பீர்களா.?”

15/n
- எனக் கேட்கிறார்.

🕶கலைஞர் பதில்: அமைச்சர் என்ற முறையிலோ, எந்த வகையிலோ சென்று அவர்கள் சாமி கும்பிட்டு வந்தால், எனக்கு ஆட்சேபணை இருக்கப்போவதில்லை இவரும் தீ மிதித்தது பற்றி எனக்கு ஒரு எதிர்ப்பும் இல்லை. ஆனால், கருணாநிதி ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதற்காக அதைச் செய்தேன்..

16/n
என்று அவர் கூறியது தான் என்னுடைய கண்டனத்திற்குரியதாயிற்று.!

உண்மை இவ்வாறிருக்க, 'துக்ளக்' ஏட்டைச் சேர்ந்த ரமேஷ், ஊடக விவாதமேடைகளில் அமர்ந்து கொண்டு திரும்பத் திரும்ப, "தீ மிதித்த அமைச்சரை கலைஞர் காட்டுமிராண்டி என்று கூறினார்” என்று கூறுகிறார். இதிலிருந்து,..

17/n
அவர் பணிபுரியும் 'துக்ளக் ஏட்டை அவரே சீண்டியதில்லையோ என்ற ஐயமே ஏற்படுகிறது.!

கழகத் தலைவர் தளபதி, 'வேலை' வாங்கியது என்ன, அத்தனை பெரிய கொள்கை விரோதச் செயலா.?

வேல், வீரர்களின் படைக்கலன்தானே! முருகன் மட்டுமா வேலேந்தியிருந்தார்.?

'வேலேந்தும் மூவேந்தர் ஆண்டிருந்த..

18/n
தென்னாடே' என கவியரசர் #கண்ணதாசன் எழுதினாரே.!

கலைஞரின் புறநானூற்றுக் கவிதை நடைச் சொல்லோவியத்தில், போர்வீரனின் குடிசையை வருணிக்கும்போது,

“குடிசைதான்... ஓர்புறத்தில், கூரிய வேல் வாள் வரிசையாய் வீற்றிருக்க எனக் குறிப்பிட்டுள்ளாரே;
“கை வேல்களிற்றோடு போக்கி வருபவன் மெய்வேல்..

19/n
பறியா நகும்” எனும் குறள், வீரன் கை ஆயுதமாக, வேலை பாவித்து எழுதப்பட்டதுதானே.!

இப்படி முருகன் கையில் மட்டுமின்றி, மன்னர்கள் கையில், வீரர்கள் கையிலிருந்து எதிரிகளை 'சம்ஹாரம் செய்யும் 'வேலை'க் கையிலெடுத்த கழகத் தலைவர் தளபதி, வீணர்கள் ஆட்சியை அழித்து வெற்றி முகட்டை..

20/n
எட்டிவிட்டார் என்பதற்கு எடுத்துக்காட்டாகவே,திருத்தணி கூட்ட நிகழ்வு சரித்திர நிகழ்வாக மாறிவிட்டது மாற்றிய கூட்டத்துக்கு நன்றி சொல்வோம்.!

ஆவேசத்தை அள்ளிவரும் வேல்.! ஆணவத்தை அகற்ற துள்ளி வரும் வேல்.!
பகை முடிக்கப் பறந்துவரும் வேல்.!

வீரவேல்..! வெற்றிவேல்..!

n/n

#கலைஞரிஸ்ட்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Kalaignarist - கலைஞரிஸ்ட்

Kalaignarist - கலைஞரிஸ்ட் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kalaignarist

22 Jan
#Thread

"18 வயசுல" ஒரு (திக) இயக்கத்தில் சேரனும்..

"19 வயசுல" சொந்தமா திரைக்கதை எழுதி நாடகம் போடணும்..

"20 வயசுல" பத்திரிக்கையில் எழுத்தாளராகனும்..

"21 வயசுல" அந்தப் பத்திரிகைக்கு துணையாசிரியராகனும்..

"22 வயசுல" சினிமாவிற்கு (ராஜகுமாரி) வசனம் எழுதி..

1/n
நண்பனை (#MGR) கதாநாயகன் ஆக்கணும்..

"23 வயசுல" மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான எழுத்தாளர் ஆகணும்..

"24 வயசுல" கொள்கை அரசியலிலிருந்து வாக்கரசியலிற்கு மாறனும்..

"25 வயசிலேயே" கவர்னருக்கு
கருப்புக்கொடி காட்டி கைதாகனும்..

"26 வயசுல" புரட்சிகரமான வசனகர்த்தாவாக மாறனும்..

2/n
"27 வயசுல" தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட #பராசக்தி படத்திற்கு வசனம் எழுதனும்...

"28 வயசுல" தன் உழைப்பால் சம்பாதித்ததில் வீடு கார் வாங்கணும்...

"29 வயசுல" தண்டவாளத்தில் தலைவைத்து கைதாகி 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கணும்...

"30 வயசுல" பிரபலமான பத்திரிக்கை ஆசிரியர்..

3/n
Read 10 tweets
20 Jan
#Thread

தமிழக வரலாற்றிலும் சரி-இன்றைய காலகட்டத்திலும் சரி திமுகவை தவிர்த்து வேறு யாரை ஆட்சியில் அமரவைக்க மாண்புமிகு நடுநிலைகள் போராடுகிறார்கள் !?

சங்கிகளையா?
சாதிய கூட்டத்தையா?
தமிழ் போராளி குழுக்களையா?
அல்லது கூவத்தூர் கூட்டத்தையா ?

1/n Image
அவர்களாகவே சொல்லிவிட்டால் இன்னும் எளிதாக இருக்கும் பேசுவதற்கு -இந்த நடுநிலைகள் வெளியில் மட்டும் அல்ல கூடவே கட்சி ஆதரவு முகமூடி போட்டுக்கொண்டும் உலவுகிறார்கள்!

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று #காமராஜர் சொன்னபொழுது , கலைஞர் சொன்ன பதில், அது அதிமுகவையும் காப்பாற்றுவது..

2/n
போலே இருக்கும், அவர் எண்ணமெல்லாம் எதோ தேசிய கட்சி ஒழிந்தது ஒழிந்ததாகவே இருக்கட்டும் கூடவே வைத்து #அதிமுக-வையும் காப்பாற்றினால் தான் தமிழகத்தை காக்க முடியும் என்பது அவரின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருந்திருக்கிறது!

3/n
Read 22 tweets
18 Jan
#Thread

@mkstalin எனக்கு ஆச்சரியம் அளிக்கிறார், பலவீனமானவராக காவி மீடியாக்கள் சித்தரிக்க முயலும், ஸ்டாலின் அவர்களின் சமீபகால நடவடிக்கைகள் என்னை அவரை நோக்கிக் கவனிக்க வைக்கிறது...

அதற்கு நான் குறிப்பிடும் காரணம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னதானது,..

1/n
ஜெயா உயிரிழந்த சமயம் அவரது கட்சி ஒரு ஸ்திரத் தன்மையை இழந்து இருந்தது, அந்த நேரத்திலே சட்டசபையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அப்பொழுது இந்தியாவில் பாஜகவில் கரம் வலிமையாக சென்று கொண்டிருந்தது. எல்லா இடங்களிலும் குதிரை பேரங்களும் ஆட்சி மாற்றங்களும்..

2/n
பரவலாக நடந்துகொண்டிருந்தது... இன்னும் சொல்லப்போனால் பல தலைவர்கள் மிரட்டல்கள் மூலமாகப் பணிய வைக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்...

திரு ஸ்டாலின் நினைத்திருந்தால் பாசிசத்தோடு கைகோர்த்து இந்த அரசை நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே டிஸ்மிஸ் செய்திருக்கக்க முடியும்!

அங்குதான்..

3/n
Read 11 tweets
14 Jan
#Thread

பார்ப்பனீயம் கதறுகிறது ..
பார்ப்பனீயம் பதறுவது கண்டு மனம் மகிழ்கிறது
திமுகவை வீழ்த்த சசிகலாவை கூட அதிமுக இணைத்துக்கொள்ளவேண்டும் கூடவே சாக்கடை ஜலமென்றாலும் அள்ளி தீயை அணைக்கலாமாம் ..
எந்த சசிகலா முதல்வராக கூடாதென பன்னீரை பகடைகாயக்கி தர்மயுத்தமெல்லாம்..

1/n
நடத்த வைத்தார்கள் இன்று வேறுவழியின்றி சசிகலாவின் காலில் விழகூட தயாராகி நிற்பது அறிந்து மனம் துள்ளுகிறது ..
பார்பனீயம் என்ன செய்தாலும் திமுகவின் வெற்றியை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்ற உண்மை உணர்ந்து குருமூர்த்தி கதற தொடங்கியிருக்கிறார்..
..

2/n
2018 ஒரு பக்கம் ரஜினி ஒரு பக்கம் மோடி இருந்தா போதும் என்றவர் ..மோடியை மூத்திரசந்தில் ஓடவிட்டது தமிழகம்.. ரஜினி தொடர் அழுத்தம் தந்து அரசியலிலுக்கு இழுந்து தில்லுமுல்லு செய்தேனும் அதிகாரத்திற்கு வந்திடவேண்டும் ..திமுக அதிகாரத்தை இலகுவாக அடைய கூடாதென்ற தண்ணீர்..

3/n
Read 9 tweets
12 Jan
#தலைவர்_கலைஞர் நிலையானவர்.

தஞ்சை, பாபநாசம், புளியமரத்துக் கடை , காலை சிற்றுண்டிக்காக நுழைந்த போது கலைஞர் அளித்த கலைஞர் டீ.வி ஓடிக் கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ 15 ஆண்டுகளாக அந்த டீவி அதே இடத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது .

டீக்கடையில் டீவி என்பது நிறுத்தப்படாமல்..

1/4 Image
தொடர்ந்து பத்துமணி நேரம் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை அந்த டீவி எவ்வித பழுதுமின்றி இயங்கிக் கொண்டிருப்பதை அவ்வழி செல்லும் மாற்று இயக்கத்தினர் விசாரித்துக் கொள்ளலாம்.

ப்ராண்டட் டீவி வாங்கினால் கூட 2 அல்லது மூன்று வருட கியாரண்டி மட்டுமே. விலையில்லா டீவியானாலும்..

2/4
அந்த தேர்தலை கருத்தில் கொண்டு வழங்காமல் தொலைநோக்கு பார்வையுடன் தொலைக்காட்சி வழங்கி இருக்கின்றார் தலைவர் கலைஞர்.

ஜெயலலிதா படம் போட்ட Fan,மிக்ஸி. கிரைண்டர் இயங்குவதை யாராலும் காட்ட இயலாது, காயலான் கடையில் காட்டினால் தான் உண்டு.

கலைஞர், மக்களுக்கு சிறப்பான ஒன்றைத் தான்..

3/4
Read 4 tweets
5 Jan
#Thread

திமுகவை பொறுத்தவரை புதுடெல்லியில் ஒரு நம்பகத்தன்மை உள்ள நபர் எப்போதும் தேவைப்படுகிறது.

#அறிஞர்_அண்ணா, தானே #திமுக-வின் முகமாக பாராளுமன்றத்தில் முழங்கிய போது, அது திமுகவின் குரலாக ஓங்கி ஒலித்தது.

அவருக்கு பிறகு இரா. செழியன், முரசொலி மாறன்,..

1/n
#வைகோ, #தயாநிதிமாறன் என எத்தனையோ பேர் இருந்தாலும் கலைஞருக்கு மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த முகம் #முரசொலி_மாறன் மட்டுமே.

அதேபோல தற்போதைய தலைவர் திரு @mkstalin அவர்களுக்கு நம்பிக்கை வாய்ந்த முகமாக கனிமொழி கருணாநிதி எம்.பி விளங்குகிறார்.

10% பொருளாதார அடிப்படையில்..

2/n
போலியாக இட ஒதுக்கீடு கொண்டு வந்தபோது எதிர்த்து வாக்களித்து தோற்கடிக்க வேண்டியபோது #காங்கிரஸ், #கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனது நிறத்தை காட்டிய போது, தனி ஆளாக எதிர்த்து பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

எச்.ராஜா போன்ற மனநோயாளிகள்..

3/n
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!