, 22 tweets, 3 min read
*திருப்புவனம்*

சகல குல தெய்வ , பித்ரு , சாப , பாப , செய்வினை தோஷ நிவர்த்திக்கான ஸ்தலம் .
*ஸ்ரீ சரபர் ஆலயம்.*

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து மாயவரம் செல்லும் பாதையில் சுமார் 8 Km தொலைவில் உள்ளது ,

*திருபுவனம்.*

இங்கு அமைந்துள்ளது.

அருள்மிகு கம்பஹரேஸ்வரர் திருக்கோவில்.
1
அன்னை அருள்மிகு அறம்வளர்த்த நாயகியின் துணையோடு எம்பெருமான் ஐயன் அருள்மிகு கம்பஹரேஸ்வரர் அருளாட்சி செய்யும் இந்த அற்புத திருத்தலத்தில்தான் உலகம் உய்யவேண்டி தீமைகளை வேரறுக்கும் மாபெரும் சக்தியான அருள்மிகு சரபேஸ்வரர் பெருமானின் திருச்சந்நிதி அமைந்துள்ளது.

2
கம்பஹரேஸ்வரர் என்றால் நடுக்கம் தீர்த்தவர் என பொருள்படும்.

பூகம்பம் என்றால் நிலநடுக்கம் (பூ-நிலம் - கம்பம் – நடுக்கம்)

ஹரேஸ்வரர் - ஹர – என்றால் இல்லாமல் செய்தல் – 

ஹரேஸ்வரர் இல்லாமல் செய்த ஈஸ்வரர். .

3
பிரம்ம இராக்ஷசனால் பின் தொடரப்பட்ட வரகுண பாண்டியன் மிக நடுங்கினான் , அருள்மிகு கம்பஹரேஸ்வரரை அண்டி தஞ்சம் புக அவனது நடுக்கத்தினை தீர்த்த எம்பெருமான் நடுக்கம் தீர்த்தபெருமானாக காட்சியருள்கின்றார்.

4
தனி சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு சரபேஸ்வரர் தீமைகளை அழிப்பபவராக திகழ்கின்றார்.

பயமும், தீமையும் இங்கே அழிக்கப்படுவதால் 

அம்பிகை இங்கே அருள்மிகு அறம்வளர்த்த நாயகியாக ஆட்சி புரிகின்றார்.

5
ஹிரண்யகசிபுவை அழித்த ஸ்ரீநரசிம்ஹர் , அசுரனின் இரத்தம் உள்ளே சென்றதும் தன்நிலை மறந்து ஆவேசம் கொண்டவராக எதிர்பட்டவர்களை எல்லாம் கிழித்தெறியலானார் .

6
தேவர்கள் இறவா வரம் பெற்ற காரணத்தினால் மீண்டும் உயிர் பெற்றனர் , ஸ்ரீ நரசிம்ஹரால் மீண்டும் கிழிக்கப்பட்டனர் .மீண்டும் உயிர் பெற்றனர் .

இப்படியாக இருக்க எல்லோரும் ஸ்ரீ மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட , அவர் இவர்களோடு சென்று ஸ்ரீசிவபெருமானிடம் உபாயம் கேட்டனர்.

7
அவர் தன்னுடைய அஸ்திரங்களை சரமென தொடுத்தார் , அனைத்தையும் உடைத்தெறிந்தது நரசிம்ஹம்.

அனைவரும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரியை தொழ அம்பாள் கருணை கொண்டு ஒரு உபாயம் தந்தாள்.

அதாவது நீங்கள் போரிடும் எதிராளி இரண்டு இனங்களை சேர்த்து வந்தது. நீங்கள் ஒருவராக போரிட்டால் வெற்றி கிட்டாது ,

8
ஆகவே நீங்கள் மனித , மிருக , பட்சியாக மாறி அதனை காற்று வெளிக்கு அப்பால் கொண்டு சென்று அடக்குங்கள் என்று பணித்தாள். “””அண்டம் அதனை கீறி சென்று ””” என்கிறது ஸ்ரீ ஸரப புராணம்.

(காற்று மண்டலம் தாண்டி எனப்பொருள்.)

9
காற்று மண்டலத்திற்கு மேல் எந்த பொருளும் தன்னுடைய எடை இழக்கும் என்பதை அன்றே நமது புராணங்கள் பறை சாற்றியுள்ளன.

ஒரு துளி உதிரம் சிந்தினாலும் அங்கே ஒரு நரசிம்ஹம் தோன்றும் என்பதால் உடனே மனித மிருக பக்ஷியாக சரபேஸ்வரர் தோன்றினார்.

10
ஒவ்வொரு கர்ஜனைக்கும் தன்னுடைய உருவத்தினை பலமடங்கு பெரிதாக்கிய நரசிம்ஹத்தினை உயரே கொண்டுசெல்வது சாதாரணமான காரியம் அல்லவே – ஆகவே சரபரின் ஒரு இறக்கையாக ஸ்ரீ சூலினியும் (பத்ரகாளியும்) மறு இறக்கையாக ஸ்ரீ ப்ரித்யங்கராவும் மாறினர்.

11
மிக அதிகமான எடையைக்கொண்ட நரசிம்ஹத்தினை அனாயாசமாக உயரே கொண்டு சென்றது சரபம் , காற்று மண்டலத்தினை கடந்து அங்கேயே வைத்து அதன் உதிரம் அனைத்தையும் வெளியேற்றியது .

வெறும் சக்கையை கீழே வீசியது , கீழே விழுந்த நரசிம்ஹம் அப்போதும் கர்ஜனையை செய்து விரட்டியது.

12
அப்போது சிவபெருமானாவர் ஸ்ரீ சட்டைநாதர் எனும் அவதாரம் கொண்டு அவரது தோலை கிழித்து தன்னுடலில் போர்த்திக்கொண்டார் ,

இதனை மயூரத்தில் உள்ள ஸ்ரீ சட்டைநாதர் சந்நிதியில் காணலாம்.

இன்றும் ஸ்ரீ சட்டைநாதருக்கு புனுகு மட்டுமே சாற்றப்படுகின்றது. இதனை மயூர புராணம் விளக்குகின்றது.

13
இதன் பின்னரே தன்நிலையை உணர்ந்தார் ஸ்ரீ நரசிம்ஹர் , அவரை தன்னோடு அணைத்து தாம் இருவரும் ஒன்றே என உலகிற்கு உணர்த்தினார் ஸ்ரீ சரபேஸ்வரர்.

14
இங்கே காணப்படும் எம்பெருமான் ஸ்ரீ சரபேஸ்வரரின் , மூர்த்தி ரூபத்தில் ஸ்ரீ சரபர் பெருமான் , ஸ்ரீ நரசிம்ஹத்தினை தனது கால்களால் பற்றி தூக்கிச் செல்வதாக அமைந்திருக்கும்.

15
இங்கே ஸ்ரீசரபரை அர்ச்சனை செய்தால் ஒரேநேரத்தில் ஸ்ரீ சரபர், ஸ்ரீ மகாவிஷ்ணு, ஸ்ரீசூலினி (ஸ்ரீபத்ரகாளி), ஸ்ரீ ப்ரித்யங்கிரா ஆகியோரை அர்ச்சனை செய்த பலன் கிடைக்கும்.

16
செய்வினை கோளாறுகள் : குலதெய்வ சாபங்கள், குலதெய்வ தோஷங்கள் என்று எதனாலும் தீராத எல்லாவிதமான தோஷங்களையும் நீக்கும் வல்லமை உள்ளது ஸ்ரீ சரபரின் இந்த திருக்கோவில்.

ஆனால் நமது கோரிக்கையில் சத்தியம் இருக்கவேண்டும் இல்லாவிடில் நமக்கே தீங்கு வரும் என்பதை மறக்கவேண்டாம்.

17
*#அமைவிடம் :*

ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருபுவனம் என்னும் கிராமத்தில் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

18
13- ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னன குலோத்துங்கனால் இக்கோவிலின் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன. அவருக்கு பிறகு வந்த சேர, சோழ, பாண்டிய வம்சத்தினை சேர்ந்த மன்னர்கள் அப்பணியை தொடர்ந்து கட்டி முடித்தனர்.

19
சோழர்களால் புதுப்பிக்கப்பட்ட கடைசி கோவில் இதுவென வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

20
சரபர் காயத்ரி :

சாலுவேசாய வித்மஹே 

பக்ஷி ராஜாய தீமஹி 

தந்நோ ; ஸரப ப்ரஜோதயாத் :

சரபர் ஜப மூல மந்த்ரம் :

ஓம் ஐம் கேம் காம் கம்பட் 

பிராணக்ரஹாஸி பிராணக்ரஹாஸி ஹூம்பட் ;

ஸர்வ சத்ரு ஸம்ஹாரனாய ; 

ஸரப சாலுவேசாய ;

பக்ஷி ராஜாய ஹூம்பட் ஸ்வாஹா .

21
ஸ்ரீ சரபரை மனதினில் எண்ணி அமைதியில் ஆழ்ந்து த்யானித்து அருள் பெறுங்கள் , உங்கள் வாழ்வில் பல அதிசயங்களை காண்பீர்கள் .

வாழ்க பாரதம்
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!