, 17 tweets, 4 min read Read on Twitter
#Thread #அசுரன்
அட்டகாசமான ஒரு கமர்ஷியல் திரைப்படம். 👌👌
நடிப்புத் திறமையுள்ள நட்சத்திர நடிகனுக்குத் தீனி போடுவதற்காகவே திறமையான ஓர் இயக்குநர் எடுக்கும் மாஸ் திரைப்படத்தின் அத்தனைக் கூறுகளும் கொண்ட திரைப்படம் இது. கமல்ஹாசனுக்கு அமைந்த சலங்கை ஒலி, நாயகன், புன்னகை மன்னன் போல!
தனுஷ் இந்த நூற்றாண்டின் தனிச்சிறந்த நடிகன். யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. இந்திய சினிமாவில் ஒரே ஒரு தனுஷ்தான். “ஹே மைடியர் ராணி, என் டீரீமிலே வா நீ” என ரவுடி பேபி ஆடும் மாரியும், இந்தச் செவசாமியும் ஒரே நபர்தான் என்றால் வெளிநாட்டுக்காரன் நம்ப மறுப்பான்.
கடைத்தெருவில் நடந்து செல்லும் தாய், கண்ணில் படும் ஆடைகளை எல்லாம் மானசீகமான தனதுக் குழந்தைக்கு அணிந்து பார்ப்பதைப் போல, வெற்றிமாறன் தான் காணும் காட்சி, பார்க்கும் படம், படிக்கும் புத்தகம் அனைத்திலும் தனுஷை இட்டுப் பொருத்திப் பார்ப்பார் போலிருக்கு! தனுஷுக்கு நல்ல குடும்பம்,
சூப்பர் மாமனார் கிடைத்தற்கு இணையான நல்லூழ் இப்படியோர் இயக்குநர் கிடைத்ததும்! 😊
#அசுரன் திரைப்படம் தமிழகத்தின் சாதிய அடக்குமுறைகளை எதிர்கொண்டு போராடும் இரண்டு தலைமுறைகளின் பின்னணியில் அமைந்த கதைக்களம். அதன் நம்பகத்தன்மையை நிறுவிட அவர் மூலக்கதையாக பூமணியின் நாவல் ஒன்றை எடுத்து
முதல் பாதி திரைப்படமாக அமைத்ததிலேயே இயக்குநர் வெற்றி பெற்றுவிட்டார். பின்பாதி கதையை அந்தத் திரைக்கதையே தன்னாலே எழுதிக் கொண்டது.
ஆனால், இந்தக் கதையை இயக்குநர் தனக்கே உரிய கமர்ஷியல் அணுகுமுறையுடன், வெகுஜன ரசனைக்கேற்ப எடுத்ததுதான் இந்தப் படத்தின் சிறப்பு என்பேன்! இல்லையெனில் இத்தனை
கனமான கதை விருதுகளுக்காக எடுக்கப்பட்ட மற்றுமோர் அவார்ட் படம் என வீச்சளவில் சுருங்கியிருக்கும்!
வாழைத்தோப்பில் பன்றியை விரட்டும் ஒரு காட்சி! அதை பாகுபலி ரேஞ்சுக்கு படமாக்கிய விதத்தில் தனுஷ் எனும் நட்சத்திர பிம்பத்தின் மீதான வெற்றிமாறனின் அக்கறையை நாம் புரிந்து கொள்ளலாம்!
மொத்த திரைக்கதையுமே நான்கு சண்டைக் காட்சிகளின் மீது கட்டமைக்கப்பட்ட அந்த நுணுக்கம், கமர்ஷியல் கிங் எனப்படும் இயக்குநர்களை எல்லாம் பிரமிக்க வைக்கும் ஒன்று. அந்தச் சண்டைக் காட்சிகளோ, இந்தியாவின் அத்தனை சூப்பர் ஸ்டார்களையும் பொறாமைப்பட வைப்பவை என்பது வேற டிபார்ட்மெண்ட். அது வலி.
தனுஷ் நடிப்பு, மற்ற கதாப்பாத்திரங்களின் உருவாக்கம், அவர்களின் நடிப்பு, இந்தப் படத்தின் காட்சியனுபவம், கதையின் போக்கு போன்ற எதையும் சொல்ல விருப்பமில்லை. அவை சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரும் நேரில் கண்டு உணர வேண்டிய ஒன்று.
ஆனால், திரைக்கதை ஆசிரியராக மணிமாறன் & வெற்றிமாறன் இதில்
நிகழ்த்தியிருக்கும் சாதனை எதிர்கால திரைக்கதை ஆசிரியர்களுக்கு ‘சி+ படிக்க பாலகுருசாமி புத்தகம்’ போல ஒரு நிரந்த ரெஃபரன்ஸ் படமாக இருக்கும். மிகச் சிறிய கேரக்டர்கள் கூட தேடிப்பிடித்து கதைக்குள் இழுத்து வரப்பட்டிருக்கும்! மெருகேற்றப்பட்டிருக்கும். வாழ்வில் எல்லா இடத்திலும்
ஒரே ஒரு மனிதரிடமேனும் மனிதம் இருக்கும் என நம்பிக்கையூட்டப் பட்டிருக்கும். பஞ்சமி நில மீட்புக்காக போராடும் போராளியாக வரும் ஓர் ஐயங்கார் வக்கீல் வரும்போது, குடிசைகளை கொளுத்த திட்டமிடும் போது, ஆதிக்கச் சாதியில் ஒரே ஒருத்தர் இதெல்லாம் தப்புடா என புலம்பும்போது, தனது பேரில் எழுதித்
தரப்பட்ட பத்திரத்தை முதலாளிக்குத் தெரியாமல் திரும்ப எடுத்துக் கொண்டு வந்து செவசாமியிடமே தரும் சக பஞ்சமர் என நுணுக்கமாக மட்டுமல்ல, நிதர்சனமான அவதானிப்புகள் கொண்ட கட்டமைப்பு இந்தத் திரைக்கதை.
போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டர் மட்டும்தான் இதில் ஒரே ஒரு க்ளீஷே! என்ன செய்ய!
எந்தக் காலத்திலும் அவர்கள் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள் என கொள்ள வேண்டியதுதான். அதிலும், வெள்ளாட்டுக் குட்டியை இன்ஸ்பெக்டரே திருட முயலும் சுவாரஸ்யத்தை இணைத்தது சிறப்பு.

ஒடுக்கப்பட்ட எளிய மனிதர்கள் மீது ஆதிக்கச் சாதிகள் நிகழ்த்திய, நிகழ்த்திக் கொண்டிருக்கிற அடக்கு முறைகளை
இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும், எத்தனை வழிகளிலேனும் சொல்லிக் கொண்டே இருக்கலாம்! ஏனெனில் ஒரு பண்பட்டச் சமூகம் எப்படி நடக்கக்கூடாது என்பதற்கான பாடம் அது.
அந்த அடக்குமுறைகளுக்காக புலம்பாமல் இருந்தது, அவற்றை எதிர்கொண்டு வென்றது, தோற்றது போன்ற சம்பவங்களை எதையும் Glorify செய்யாமல்
இயல்பாக நகர்ந்தது, எதிர்காலம் இப்படியே இருக்காது என அடுத்தத் தலைமுறையிடம் நம்பிக்கையை விதைத்தது, “படிச்சு வந்து அதிகாரத்தில் அமரும்போது அவங்க உனக்குச் செய்ததை நீ யாருக்கும் செய்யாதே” எனும் மேன்மையான போதனையை வெகு இயல்பாக சொல்லி மக்களின் மனதில் பதிய வைப்பதுமே இந்த அற்புதமான
திரைப்படத்தின் சிறப்பு.
“ஒரே இடத்தில் பிறந்தோம்! ஒரே மொழியை பேசுறோம்! ஒண்ணா சேர்ந்து வாழ இதை விட வேற என்ன வேணும்?” எனும் செவசாமியின் கேள்விதான் எதிர்காலத் தமிழகம் பயணிக்க வேண்டிய வழித்தடம்.
பிறந்தச் சாதியின் பேரால், வணங்கும் கடவுளின் பேரால், உண்ணும் உணவின் பேரால் தமிழர்களை பிரித்துப் பார்த்திடும் எதையுமே நாம் தொடர்ந்து நிராகரித்திடுவோம். நம்மையெல்லாம் ஒரே உணர்வுள்ள ஒற்றை அடையாளமாக்கிட தமிழ் ஒன்று போதும். அதுவே நமது பெருமை.
#அசுரன்
அந்த ஆதார உணர்வை இந்தத் திரைப்படத்தின் மூலம் மிக வலுவாக இளம் தலைமுறையினர் மனதில் பதித்திட்ட தனுஷுக்கும், வெற்றி மாறனுக்கும் எனது அன்பும், முத்தமும்.

- எஸ்கேபி. கருணா

@dhanushkraja @VetriMaaran

#Asuran #அசுரன்
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to SKP KARUNA
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!