கரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசி பற்றி சில சந்தேகங்களும் பதில்களும்.
1) கரோனா வைரஸ் எதனால் ஆபத்தான வைரஸ்?
கரோனா வைரஸ் ஒரு வைரஸ். வைரசுக்கு பொதுவா மருந்து கிடையாது. பேக்டீரியாவுக்கு உண்டு. வைரஸை அழிக்க நம் உடம்பு தயாராக வேண்டும். சண்டை போட வேண்டும். #COVID19#Covishield#Covaxin 1/n
குளிர் காலத்தில் வரும் சளி, காய்ச்சல் வைரஸ்களால் வரலாம். ஆனா அவை பெரும்பாலும் ஆபத்தானவை அல்ல. பெரிய பாதிப்பு வரும் முன்பு நம் உடம்பு சண்டையிட்டு அழித்து விடும். ஆனா கரோனா வைரஸ் மிக வேகமாக நம் உடம்புக்குள் பரவுவதோடு, நம் நுரையீரலை பாதிக்கும். #COVID19#Covishield#Covaxin 2/n
உடம்புக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. மூளை முதல் உள்ளங்கால் வரை உறுப்புகள் பாதிக்கப்படலாம். அதனால்தான் கரோனாவில் இருந்து மீண்டு வர அதிக காலம் ஆகும். ஆனா அதிர்ஷ்டவசமாக பலருக்கு நம் உடம்பு நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்து காப்பாற்றி விடும். #COVID19#Covishield#Covaxin 3/n
வயதானவர்கள், வேறு உடல் குறைபாடு உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இவர்கள் எல்லாம் அதிகம் பாதிக்க படுவார்கள். இவர்களை கரோனா வைரஸ் தாக்கினால் மீண்டு வருவது சிரமம். #COVID19#Covishield#Covaxin 4/n
2) வைரஸ் தடுப்பூசி எப்படி வேலை செய்யும்?
பொதுவாக எல்லா தடுப்பூசியும் என்ன செய்யும் என்றால் நம் உடம்புக்கு வைரஸ் எப்படி இருக்கும் என்று அடையாளம் காண்பிக்கும். பழைய முறையில் "சாகடிக்கப்பட்ட" வைரஸை உடம்புக்குள் செலுத்துவார்கள். #COVID19#Covishield#Covaxin 5/n
இந்த தடுப்பூசி வைரஸ் உடம்புக்குள் பல்கி பெருக்காது. நம் உடம்பு அதை கண்டு எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். அடுத்த முறை நிஜமான வைரஸ் உடம்புக்குள் வரும்போது நம் உடம்புக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். #COVID19#Covishield#Covaxin 6/n
3) கரோனா வைரசுக்கு தடுப்பூசி ஏன் போட வேண்டும்? (முதல் கேள்விக்கான பதிலை படிக்கவும்)
கரோனா வைரஸ் ஆபத்தானது. உடல் தாக்கப்பட்டதும் நேராக நுரையீரலை தாக்கும். அதனால் நம் உடம்பு நுரையீரலை வைரஸ் தாக்கும் முன்பு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க வேண்டும். #COVID19#Covishield#Covaxin 7/n
அப்படி வேகமாக உருவாக்க முடியாவிட்டால் நாம் இறப்பதை தவிர வேறு வழி இல்லை. அதோடு யார் உடம்பு விரைவில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்று தெரியாது. கரோனா வைரஸ் பாதித்த பின்தான் தெரியும். #COVID19#Covishield#Covaxin 8/n
4) கரோனா தடுப்பூசி எப்படி வேலை செய்கிறது?
பொதுவாக "சாகடிக்கப்பட்ட" வைரஸை உடம்புக்குள் தடுப்பூசி மூலம் செலுத்துவார்கள். அப்படியான ஒரு தடுப்பூசி கோவாக்சின். (இது எப்படி வேலை செய்யும் - கேள்வி & பதில் 2) #COVID19#Covishield#Covaxin 9/n
அப்படி அல்லாமல் கரோனா வைரசின் ஜெனெடிக் கோட் மட்டும் உடம்புக்குள் செலுத்துவது மற்ற வாக்சின்கள் - பைசர், ஜான்சன் & ஜான்சன், கோவிஷீல்டு, மாடெர்னா, அஸ்டரா ஜெனிக்கா எல்லாமே. #COVID19#Covishield#Covaxin 10/n
உள்ளே செலுத்தப்படும் ஜெனெடிக் கோட் மூலம் கரோனா வைரஸின் கொக்கி போன்ற பகுதி நம் உடம்புக்குள் இந்த தடுப்பூசியால் உற்பத்தி செய்யப்படும்.
இந்த கொக்கி போன்ற பகுதியை நம் உடம்பு கண்டுகொண்டு அதற்கெதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்யும். #COVID19#Covishield#Covaxin 11/n
5) உருமாறிய வைரசுக்கு இந்த தடுப்பூசிகள் வேலை செய்யுமா?
கோவாக்சின் தடுப்பூசியை "சாகடிக்கப்பட்ட" கரோனா வைரஸ் உள்ளே செலுத்தப்படும். அதனால் முழு கரோனா வைரஸும் மாற்றம் அடைந்தால் மட்டுமே தடுப்பூசி வேலை செய்யாது. ஆனா உருமாற்றம் என்பது ரொம்ப சின்னது #COVID19#Covishield#Covaxin 11/n
கரோனா வைரஸின் மேற்புறம் உள்ள கொக்கி போன்ற பகுதிக்கு எதிரா நம் உடம்பை இந்த தடுப்பூசி தயார் செய்யும். ஆனா இந்த கொக்கி போன்ற பகுதி உருமாற்றம் அடையவில்லை. அதனால் தடுப்பூசி வேலை செய்யும் #COVID19#Covishield#Covaxin 13/n
6) தடுப்பூசி போட்டவர்களுக்கும் கரோனா வருகிறதே?
கரோனா தடுப்பூசி (சில மாதங்கள் கழித்து) உங்கள் உடம்புக்கு கரோனா வருவதை தடுக்காது. மாறாக கரோனா வைரஸ் தாக்கினால் என்ன செய்யவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கும். #COVID19#Covishield#Covaxin 13/n
அதனால் கரோனா தடுப்பூசி போட்ட பிறகும் உங்களுக்கு கரோனா வைரஸ் தாக்கலாம். ஆனா உங்கள் உடம்புக்கு என்ன செய்யவேண்டும் என்று தடுப்பூசி சொல்லிக்கொடுத்திருப்பதால் உங்கள் உடம்பு கரோனா வைரசுக்கு எதிராக விரைவில் செயல்பட்டு உங்கள் உடம்பை காப்பாற்றி விடும். #COVID19#Covishield#Covaxin 14/n
தடுப்பூசி = கராத்தே மாஸ்டர்
எப்படி காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று கற்றுத்தருகிறார். அடுத்த முறை உங்களிடம் ஒருவர் திருட வருகிறார், கராத்தே மாஸ்டரை குறை சொல்ல முடியுமா? அவரிடம் கற்ற வித்தையை உபயோகப்படுத்தி நீங்கள் தப்பித்துக்கொள்வீர்கள்தானே?#COVID19#Covishield#Covaxin 15/n
8) ரத்தம் உறைகிறது என்கிறார்களே?
உதாரணமா ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியில் ரத்தம் உறைவது கண்டு பிடிக்கபட்டது. எத்தனை பேருக்கு தெரியுமா? 6 பேருக்கு. ஆனா ஊசி போடப்பட்டது 7600000 பேருக்கு (76 லட்சம் பேருக்கு). #COVID19#Covishield#Covaxin 16/n bbc.com/news/world-us-…
இப்படி 6 பேருக்கு நடந்ததுக்கே அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து அந்த 6 பேருக்கு எதனால் வந்தது, அவர்களுக்கு ஆபத்தில்லை என்று கண்டு பிடித்து பிறகுதான் தொடர்ந்தார்கள். இதுவே இந்த 76 லட்சம் பெரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருந்தால்? #COVID19#Covishield#Covaxin 17/n
எத்தனை பேருக்கு கரோனா தாக்கி இருக்கும்? எத்தனை பேர் இறந்திருப்பார்கள்? இந்த 76 லட்சம் பேர் இன்னும் எத்தனை பேருக்கு கரோணாவை பரப்பி இருப்பார்கள்? அதனால் அறிவியல் மீது சந்தேகம் வேண்டாம். தைரியமா ஊசி போட்டுக் கொள்ளுங்கள். #COVID19#Covishield#Covaxin 18/n cnn.com/2021/04/23/hea…
Contraindication எதுவும் தடுப்பூசிக்கு இல்லை என்றாலும் வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், மற்ற உடல் குறைபாடுகள் இருப்பவர்கள் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக்கொள்ளுங்கள். ஒரு போன் கால் கூட போதும். #COVID19#Covishield#Covaxin
உடம்புக்குள் மருந்துகள் செலுத்தப்படும்போது அதில் முக்கியமானது அந்த மருந்து தண்ணீரில் கரைய வேண்டும். ஆனால் தண்ணீரில் கரைந்தால் அது எங்கே போக வேண்டுமோ அங்கே போய் சேராது. அதோடு நம் உடம்பு அதை உடனே வெளியேற்றி விடும். அதனால் vesicles எனப்படும் particles உள்ளே அனுப்பப்படும்.
இந்த vesicles இரண்டு பகுதிகள் கொண்டது. வெளிப்புறம். பெரும்பாலும் lipids போன்ற அமைப்பில் இருக்கும். Cancer மருந்துகள் பெரும்பாலும் தண்ணீரில் குறையாது. உதாரணம் paclitaxel. இது இந்த முறையில் உள்ளே அனுப்பப்படும். #cancer
இப்போ இந்த vesicles க்கு இரண்டு வேலைகள். மருந்தை நீண்ட நேரம் உடம்பில் (சிறுநீர், கழிவு) வழியா வெளியே தள்ளாமல் வைத்திருக்க வேண்டும். அதற்கு அந்த carrier எந்த பொருளால் கட்டமைக்க பட்டிருக்கிறது என்பது முக்கியம்.
எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்த முதல்வர் கலைஞர். எமர்ஜென்சியின் எந்த பிரச்சினையும் தமிழ்நாட்டில் நடக்காமல் பார்த்துக்கொண்டார். மற்ற மாநிலங்களில் இருந்து எமர்ஜென்சியால் பாதிக்கப்பட்ட தலைவர்கள் தமிழ்நாட்டில் அடைக்கலம் அடைந்தார்கள். அதே நேரம் #MGR எமர்ஜென்சியை ஆதரித்தார். #ADMK#DMK
எமர்ஜன்ஸியை கொண்டுவந்த இந்திராவையும், எமர்ஜன்ஸியையும் ஆதரித்தவர் எம்ஜிஆர். எமர்ஜன்சி காலத்தில் எம்ஜிஆர் கலைஞரை எதிர்த்து இயங்க ஆதரவு அளித்தவர் இந்திரா. இந்திரா ஆதரவுடன் எம்ஜிஆர் அளித்த புகாரில் கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டது ஜனவரி 1976.
இப்படி தமிழ்நாட்டில் எமர்ஜென்சி எதிர்ப்பில் கலைஞர் உறுதியாக இருந்ததால் தமிழ்நாட்டில் அடைக்கலம் அடைந்த தலைவர்களில் சிலர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், சுப்பிரமணியன் சாமி.
பாம்பு கடியால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 50,000 பேர் இறக்கிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் 52,000 பேர். அதாவது ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒருவர்.
எதனால் இது சரிசெய்யப்படாமல் இருக்கிறது? ஏனெனில் இதில் பெரும்பாலோனோர் ஏழைகள், விவசாயிகள்.
#SnakeBite#India#Science#Snake 2/n
உலகம் முழுதும் ஆண்டுக்கு தோராயமாக 1 லட்சம் பேர் இறக்கிறார்கள். அதில் பாதி இந்தியாவில். 50,000 பேர். ஆண்டுக்கு.
அதோடு இதில் இருந்து பிழைப்பவர்களுக்கு உறுப்பு இழப்பு, கிட்னி பாதிப்பு, கோரமான வடுக்கள், உளவியல் பாதிப்பு எல்லாமே.
#SnakeBite#India#Science#Snake 3/n
இந்தியாவில் கிட்டத்தட்ட 300 பாம்பு வகைகள் இருக்கின்றன. அவற்றில் கிட்டத்தட்ட 60 விஷத்தன்மை உடையது. கிராமங்களில் அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் விஷமுறிவு மருந்துகள் இருப்பதில்லை.
Priyanka Kadam, Snakebite Healing and Education Society
நேர்முக தேர்வு பற்றியும், அதன் முறைகேடுகள் பற்றியும் ட்வீட் கண்ணில் பட்டது.
என்னோட கதை வேற. ஆனா வேலை கிடைக்கல என்னும் முடிவு ஒன்றேதான்.
PhD, Postdoc எல்லாம் முடித்தும் இந்தியாவில் கல்லூரியில் ஆசிரியர் வேலை கிடைப்பது குதிரை கொம்பு. 1/n
இந்திய அரசு ஏதோ பெரிய மனசு மனசு பண்ணி கொஞ்சம் fellowships (Ramanujam, Ramalingaswami) என்று வைத்திருக்கிறது. இதெல்லாம் project எழுதி "நேர்முக தேர்வு" மூலம் செலக்ட் ஆகனும். 2/n
அதற்கடுத்து CSIR-JRF என்று ஒன்று கடந்த சில வருடங்களாக இருந்தது. ஆனா இப்போ இல்ல.
வெளிநாடுகளில் postdoc ஆக இருப்போருக்கு மட்டும் நடத்தும் சேலெக்ஷன் இது.
இதோட நேர்முக தேர்வு நடந்து ஒவ்வொரு பாட பிரிவிலும் 10 பேர் என்ற அளவில் தேர்வு செய்வார்கள். 3/n
#Universe 1/n #Aliens இருக்கிறார்களா?
வானத்தை பார்த்துக்கொண்டே ஒரு அடி தூரத்தில் நம்ம கட்டை விரலை வைத்து அந்த இடத்தில் மட்டும் கண் பார்வையை தடுக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்த கட்டைவிரல் அளவுள்ள வானத்தில் அருகிலும், தூரத்திலுமாக ஆயிரக்கணக்கான கேலக்சிகள் உள்ளன.
#Universe#Aliens 1/n
நாம் இருப்பது Milky Way என்னும் கேலக்சி. மொத்தம் நமது டெலஸ்கோப்புகள் பார்வையிட முடிந்த பிரபஞ்சத்தில் (Observable universe) கிட்டத்தட்ட 200 பில்லியன் (200,000,000,000 - இரண்டு லட்சம் கோடிகள்) கேலக்சிகள் இருக்கலாம் என்பது அனுமானம்.
#Universe#Aliens 3/n
நாம் இருக்கும் Milky Way அப்படி ஒரு கேலக்சி. சூரியன் அதில் ஒரு நட்சத்திரம். இந்த Milky Way இல் மட்டும் சூரியனை போல 100 முதல் 400 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கலாம். அதில் சூரியனை போல எல்லாவற்றுக்கும் கோள்கள் இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
மக்களே நல்லா புரிஞ்சுக்கோங்க. பொதுவாவே வைரசுக்கு மருந்து கிடையாது. சாதாரண வைரஸ் சளி, காய்ச்சல் இப்படி upper respiratory system தாக்கும் (SARS உட்பட). அது ஜெனடிக் மாற்றமடைந்து #coronavirus ஆக வந்துள்ளது. இது lower respiratory stem (lungs) பாதிக்கும். நிமோனியா வரும். #COVID19 1/n
பாக்டீரியாவால் வரும் நிமோனியாக்கு antibacterial மருந்து இருக்கு. இந்த #coronavirus ஆல் வரும் நிமோனியாவுக்கு மருந்து கிடையாது. உடம்பே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கனும். (immunity)
வயதாக ஆக இந்த நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உடல் தடுமாறும். #COVID19 2/n
அதுபோக #coronavirus அறிகுறி சாதாரண வைரஸ் தாக்குதலின் அறிகுறி போலவே இருக்கும். சிலருக்கு இந்த அறிகுறிகளே இருக்காது என்கிறார்கள். குறிப்பாக இளைஞர்கள், குழந்தைகளுக்கு "பெரும்பாலும்" அறிகுறிகள் இருப்பதே தெரியாது. #COVID19 3/n