Profile picture
, 17 tweets, 2 min read Read on Twitter
குழந்தைகள் ஜாக்கிரதை!

Pedophile என்கிற சொல்லை கேள்விப்பட்டதுண்டா? தெரியாதென்றால் இப்போதாவது தெரிந்துகொள்ளுங்கள்,அவசியம் அனைவரும் அறிய வேண்டிய விஷயம் இது

Phedophilia என்கிற உளவியல் சிக்கலில் பாதிக்கப்பட்டவர்களை பீடோபைல் என்று அழைக்கின்றார்கள்.
இந்த பீடோபைல்கள் ‘’குழந்தைகளின் மீது பாலியல் நாட்டம் கொண்டவர்கள்’’.

தினமும் இவர்களை பற்றி எண்ணற்ற செய்திகளை நாம் வாசித்து கொண்டுதான் இருக்கின்றோம்,குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் செய்கிறவர்களை இப்படித்தான் அழைக்கிறார்கள்.
பதினோறு வயதிற்கும் குறைவான சிறுவர் சிறுமியர் மீது பாலியல் நாட்டம் கொள்ளும் இந்த பீடோபைல்கள் தங்களுடைய வேட்கைக்காக அக்குழந்தைகளை வன்முறைக்கு ஆளாக்கவும் தயங்குவதில்லை.

குழந்தைகள் தொடர்பான ஆபாசப்படங்கள் பார்ப்பது அதை குறித்து வக்கிரமாக கற்பனைகள் செய்வது தங்களோடு பழகும் குழந்தைகளை
அதற்கென பயன்படுத்த முயற்சி செய்வது தன்னை போன்ற பீடோபைல்களோடு அதுகுறித்து விவாதிப்பது என இவர்களுடைய வெறுக்கவைக்கும் நடவடிக்கைகள் பட்டியல் நீள்கிறது.

இப்படிப்பட்ட மனிதர்கள் குறித்தும் CHILD SEX ABUSE குறித்தும் அடிக்கடி நிறையவே செய்தித்தாள்களில் படித்திருந்தாலும் இவர்கள் நம்மோடு
இருந்தாலும் தங்களை வெளிக்காட்டி கொள்வதில்லை,அவ்வளவு எளிதில் நாம் அவர்களை அடையாளம் காணவும் முடியாது.

ஆனால் சமூகவலைதளங்களில் இவர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்து கொண்டு அனானிமஸாக வெளிப்படுத்தி கொள்கிறார்கள்

குழு அமைத்து இதுகுறித்த உரையாடலையும் அனுபவபகிர்தலையும் முன்னெடுக்கிறார்கள்!
நேற்று இரவு இணையத்தில் அப்படி ஒரு வலைத்தளம் கண்ணில் சிக்கியது

அப்பக்கத்திற்கு சென்று பார்த்தால் சில கேடுகெட்ட அயோக்கியர்கள் பச்சிளங்குழந்தைகளின் படங்களை போட்டு அதில் அருவருக்கதக்க பாலியல் கமென்ட்களையும் சேர்த்திருந்தனர்,அப்படங்களை சமூக வலைதளத்தில் இருந்து எடுத்திருக்கின்றனர்
இணையத்தில் இயங்குகிற இத்தனை ஆண்டுகளில் முதன்முறையாக ஒரு இணையதளத்தை பார்த்து கைகால் வெலவெலத்து போனது இதுதான் முதல்முறை!

அந்த பக்கத்தை பார்த்தபிறகு பின்னிரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் மூளைக்குள் நரக வேதனையை உணர்ந்து கொண்டிருந்தேன்.
நம்மில் பலரும் இதுமாதிரியான மனிதர்களை நம்முடைய பால்யத்தில் கடந்திருக்கலாம்

அந்த பக்கத்தில் பகிரப்பட்டிருந்த அத்தனை படங்களும் நாமும் நம்முடைய நண்பர்களும் யதார்த்தமாக பகிர்ந்து கொண்ட நம்வீட்டு குழந்தைகளின் மிகச்சாதாரண படங்கள்.
அப்பக்கத்தில் பலரும் குழந்தைகளுடனான பாலியல் அனுபவங்களை ரத்தமும் சதையுமாக பகிர்ந்திருந்தனர்.

அதை வாசிக்கும்போது மயக்கமே வந்துவிட்டது,என்னால் அடுத்த சில மணிநேரங்களுக்கு ஏன் ... நேற்று இரவு முழுவதும் தூக்கம் மட்டுமல்ல மனதின் அமைதியும் போயிற்று
குழந்தைகளோடு உடலுறவில் ஈடுபடும்போது அவர்கள் வலியால் துடிப்பதை எப்படியெல்லாம் ரசித்தனர் என்பதையெல்லாம் வார்த்தைகளால் கொட்டி வைத்திருந்தனர்😣

இதில் கமென்ட் செய்திருந்த ஒருவன் பள்ளி ஆசிரியர்👿

அடுத்தடுத்த படங்களையும் கருத்துகளையும் பார்க்க பார்க்க தாங்கமுடியாத வேதனையாக இருந்தது.
இன்று சமூக வலைத்தளத்தினை பெரியவர்களை விட குழந்தைகள் அதிகமும் பயன்படுத்துகிறார்கள், எல்லாமே பதினோறு வயதிற்கும் குறைவான குட்டீஸ்கள்.

இதுமாதிரியான பீடோபைல்கள் அவர்களை எளிதில் நெருங்க முடியும்,அதனால் நம் குழந்தைகளின் சமூக வலைதள செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய பொறுப்பும்,
அங்கே இருக்கிற இதுமாதிரியான கேடுகெட்ட அயோக்கியர்களை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

நாமும் இவர்களை பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியதாயிருக்கிறது.

இவ்விவகாரத்தில் பெற்றோர்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
* உங்களுடைய குழந்தைகளின் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பொதுவில் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

குறிப்பாக குழந்தைகளாகவே இருந்தாலும் உடையில்லா அல்லது அரைகுறை ஆடையி புகைப்படங்கள் வேண்டவே வேண்டாம்.

* 2007ல் இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு சர்வேயில் குழந்தைகளின் மீது பாலியல் வன்முறையை
நிகழ்த்துபவர்களில் 50 % பேர் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

அதனால் வெளி ஆட்களை விட நெருக்கமானவர்களால்தான் ஆபத்து அதிகம் என்பதை உணர்ந்து அதற்கேற்ப கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும்.

*இணையத்தில் உங்கள் குழந்தைகளின் பள்ளி,வசிப்பிடம் மாதிரியான
விஷயங்களை தயவு செய்து பகிர்ந்துகொள்ளாதீர்கள், குழந்தைகளை நெருங்க நாமே வாய்ப்புகளை வழங்கக்கூடாது.

* குழந்தைகள் இணையத்தை பயன்படுத்தினால் அவர்களிடம் வசிப்பிடங்களை இணைக்க(Tag) செய்வது கூடாது என்பதையும் அந்நியர்களிடம் பேசுவதில் இருக்கிற ஆபத்தையும் நேரடியாக உட்கார்ந்து விளக்கவும்.
* இவை தவிர இதுமாதிரியான இணைய குழுக்கள்,பக்கங்கள் இருப்பது தெரிந்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளிக்கவும்.

சமூக வலைதளங்கள் என்பது நம்முடைய சமூகத்தின் பிரதிபலிப்பே,அதனால் சமூக வலைதளங்களில் மட்டுமல்ல இந்த கயவர்கள் நமக்கு மிக அருகிலேயே இருக்கலாம்.
அதனால் முன்ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதும்,
குட்-டச்,பேட் டச் என்பது பற்றியும்கற்று கொடுக்க வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது!

காரணம் அவர்கள் நமக்கு மிக அருகில் இருக்கிறார்கள், ஆயிரக்கணக்கில்!

குழந்தைகள் நம் உயிரின் பிரதிபலிப்பு முதலில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to Wolfrik
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!