, 20 tweets, 4 min read Read on Twitter
கடந்த வாரம் "நியூரோ எகனாமிக்ஸ்" என்கிற தலைப்பில் நான் பேசும்போது பொருப்பான பெண்களால் தான் நம் கலாச்சாரம் மட்டுமல்ல, பொருளாதாரமும் நிலைக்கும். பாரத பொருளாதாரத்தின் மையம் பெண்மை (Indian Economy is Feminine) என்று பேசினேன். அந்த வீடியோ கீழே
google.com/url?sa=t&sourc…
Indian Economy Feminine in Character என்கிற தலைப்பில் 2000ல் அமெரிக்காவில் சான் ஓஸே என்கிற இடத்தில் பேசினேன். அதன் லிங்க்
google.com/url?sa=t&sourc…
1992 லிரிந்து பெண்களும் நமது சிறுகக்கட்டி பெறுக வாழ் என்கிற குடும்ப வாழ்க்கை அடிப்படையில் தான் நமது பொருளாதாரம் அமைந்திருக்கிறது, குடும்பத்தின் மையமான பெண் தான் நமது பொருளாதாரத்தின் ஆணிவேர் என்று தொடர்ந்து பேசிவந்திருக்கிறேன்
பொருளாதாரம் பற்றிய என் பேச்சுக்களில் பெண்கள், குடும்பப் பங்கு பற்றி இல்லாமல் இருக்கவே இருக்காது. மாறாக masculinity தான் மேற்கத்திய பொருளாதாரத்தின் ஆதாரம். அங்கு பெண்கள் கூட ஆண்கள் போலத்தான். நம் பெண்கள் பெண்மையை (femininity) இழக்கவில்லை என்றும் தொடர்ந்து கூறிவந்திருக்கிறேன்
1993ல் அமெரிக்க பொருளாதார நிபுணர் ஜெகதீஷ் பகவதி பெண்கள் கஞ்சத் தனமாக இருப்பதால் சேமிப்பு அதிகமாகி நமது பொருளாதாரம் வளர்ச்சி குறைவாக இருக்கிறது என்று கூறியபோது அவரை நான் கடுமையாக விமரிசிர்த்தேன். நமது பெண்மை (femininity) காக்கப்படவெண்டும் என்று தொடர்ந்து பேசி வந்திருக்கிறேன்
கடந்த வாரமும் இதை எல்லாவற்றையும் கூறிவிட்டு மேற்கத்திய தாக்கத்தால் நமது பெண்களும் பெண்மையையும் (femininty) கலாச்சாரத்தையும் இழந்து வருகிறார்கள். அது நமது பொருளாதாரத்துக்கு ஆபத்து என்று பேசினேன்.
எனக்கு முன் நியூரோ எகனாமிக்ஸ் பற்றிய பேசிய நியுரோலாஜிஸ்ட் கர்ப்பமாகி 45 நாள் வரை குழந்தை பெண்ணாகத்தான் இருக்கிறது, அதற்குப்பிறகு தான் ஆண் குழந்தை ஆணாகிறது, பெண்களுக்குதான் 30% இடது, வலது மூளை தொடர்பு இருக்கிறது என்று கூறினார். அந்த 30% என் மனதில் ஆழப்பதிந்தது.
நான் பேசும் போது ஆணுக்குள் பெண்மையும் (femininity), பெண்ணுக்குள் ஆண்மையும் (masculinity) இருக்கிறது. அந்த கலப்பு சதவிகிதம் மாறும்போது உருவத்தில் ஆண், உள்ளத்தில் பெண், அல்லது உருவத்தில் பெண் உள்ளத்தில் ஆண் என்று ஆகிவிடும். அதாவது பெண்மையற்ற பெண் என்றாகிவிடும்.
அப்படி பெண் உடலும் ஆண் உள்ளமும் ஆனால் நமது குடும்பம் பொருளாதாரத்துக்கு ஆபத்து. எனவே பெண்மையை பாதுகாக்க வேண்டும் என்று காஞ்சி மாமுனிவர் பேசியதை குறிப்பிட்டு, மேற்கத்திய தாக்கத்தால் பெண்கள் தங்கள் பெண்மையை (femininity) இழந்து விடுவார்களோ என்று அச்சம் ஏற்படுகிறது.
இந்த கட்டத்தில் தான் மேற்கத்திய தாக்கத்தினால் இன்றைய பெண்கள் (அந்த நியோரோலாஜிஸ்ட் கூறிய 30% மனதில் கொண்டு) 30% நவீன பெண்கள் தான் மேற்கத்திய தாக்கம் இல்லாத பெண்களாக இருப்பார்கள் போல இருக்கிறது என்று நகைச்சுவையாக கூறி என் உரையை முடித்தேன்.
ஜனநாயக மாதர் சங்கம் DYFI போன்ற இடதுசாரி அமைப்புகள் நான் 30% பெண்களுக்கு தான் கற்பு இருக்கிறது என்று பேசியதாக வதந்தி பரப்பி, ஒரு கூட்டம் நடத்தி பெண்கள் வாயில் வரக்கூடாத வார்த்தைகளில் பேசி சமூக வலயதலங்களில் பரப்பினர். அவர்கள் யாரும் நான் பேசிய அந்த கூட்டத்துக்கு வரவில்லை.
நான் பேசிய கூட்டத்தில் வந்த 200 பேர்களில் 75% படித்த, தொழில் செய்யும் பெண்கள். அவர்கள் எல்லோரும் இரண்டு பேச்சையும் கேட்டு மிகவும் பாராட்டினர். அதில் ஒரு பெண் Dr Deepa. இடதுசாரி பெண்களின் அபாண்டத்தை பொறுக்கமுடியாமல் அவர் சமூக வலயதலங்களுக்கு interview கொடுத்தார்.
தீபா இன்டர்வியு லின்க்குகள்




அந்த interview க்களில் Dr Deepa தான் முழுவதும் அந்த கூட்டத்தில் இருந்ததாகவும், இரண்டு பேச்சுக்களையும் கேட்டதாகவும் இடதுசாரிகள் கூறியது போல எதுவும் அங்கு பேசப்படவில்லை என்றும் கூறினார். அவரது interview
சமூக தள வலயங்களில் சென்று கொண்டிருக்கிறது. அதை அனைவரும் பார்க்கலாம்
நான் இந்த டுவீட்களை அனுப்புவது என்னை defend செய்துகொள்ள அல்ல. நான் என்ன பேசினேன் என்று கூறி பெண்களை கேவலமாகப் பேசியதாக பொய் கூறிவரும் கம்யூனிஸ்டு ஜனநாயக மாதர் சங்கம், மற்றும் DYFI இரண்டுக்கும் அவர்களது குருவான கார்ல் மார்க்ஸ் பெண்களைப் பற்றி என்ன கூறுகிறார் என்று பாடம் எடுக்கவே
மார்க்ஸ் என்ன கூறுகிறார் பாருங்கள்:
திருமணம் செய்துகொள்வதால் பெண் தனி மனிதன் சொத்தகிவிடுகிறாள். எனவே அவளை பொது சொத்தாக்கி, பொது வேசியாக்கி எல்லா ஆண்களுக்கும் பொதுவாக ஆக்குவது தான் கம்யுனிசம்" - கார்ல் மார்க்ஸ். லிங்க்: readthenothing.wordpress.com/2011/03/17/wor…
மேலும் படியுங்கள் மாதர் சங்க மாதர்களே, காம்ரெடுகளே. மார்க்ஸ் கூறுகிறார்: கம்யுனிசம் என்றால், தனி உடைமையையும், உழைப்பையும் பொதுவுடமை ஆக்குவது என்பதால், திருமணத்துக்கு பதில் (தனி ஒப்பந்தத்துக்கு பதில்) எல்லா ஆண்களும் தடையின்றி அணுக பெண் சமூகம் நமக்கு வேண்டும்.
இந்த லிங்கை பாருங்கள்
marxists.org/archive/marx/w…. இதில் மார்க்ஸ் கூறுகிறார்: கம்யுனிஸ்ட் தத்துவம் திருமணத்தை ஒரு பூர்ஷவா பண்பாக கருதுகிறது. கம்யுனிசம் பெண்களை திருமணத்தில் இருந்து விடுதலை செய்து, அவளை சமூகத்தின் பொதுச் சொத்தாக்கிகிறது.
காம்ரேடுகளே கூறுங்கள். நீங்களா பெண்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள்? குடும்பப் பெண்களை வேசிகளாக்குவது தான் உங்கள் சித்தாந்தம். என்னுடைய உரைகளில் பெண்களை தெய்வமாக பார்க்கவேண்டும் என்று பேசுகிற என் போன்றவர்களை பார்த்து பெண்களை இழிவாக பேசுகிறவர்கள் என்றா கூறுகிறீர்கள்?
துணிவிருந்தால் பெண் மகிமை பற்றி என்னுடன் மார்க்சிஸ்ட் தத்துவத்தை முழுவதும் படித்த யாராவது விவாதத்துக்கு வாருங்கள். அரை குறைகளுடன், கண்ணியமில்லாமல் பேசுகிறவர்களுடன், தெருவில் நின்று கூச்சல் போடுகிறவர்களுடன் நான் விவாதம் செய்வது கேவலம். யாருக்காவது துணிவு இருக்கிறதா?
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to S Gurumurthy
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!