Profile picture
SKP KARUNA @skpkaruna
, 16 tweets, 3 min read Read on Twitter
#thread புலி - மோப்பம் - ரத்தவாடை - வேட்டை இயல்பு
“சபரிமலைக் காட்டில் மாதவிடாய் கொண்ட பெண் சென்றால் ரத்தவாடை கொண்டு புலி வேட்டையாடும்” என்று ஒரு சங்கியால் மட்டுமே சிந்திக்கக்கூடிய (வக்கிரம் + மிரட்டல்) ட்வீட் கண்ணில் பட்டது.
இது புலி எனும் ஓர் உயர்குண ஜீவனின் கவுரவப் பிரச்சனை.
எனவே, நாம் நமது புலியின் மதிப்பைக் காக்கும் முகமாக இந்தத் திரி.,
எல்லா காட்டு விலங்குகளைப் போல புலியும் மிகுந்த மோப்பசக்தி கொண்டது. யானைக்கு நிகரான மோப்ப சக்தி என்பார்கள். ஆனால், பலரும் நம்புவதைப் போல அந்த மோப்பகுணம் வேட்டையாட அல்ல! தனது எல்லைகளை வகுக்க, தனக்கான துணையை தேட..
தனது எதிரியின் எல்லையை அறிய, தனது குட்டிகளை கண்டறிய என பல்வகை பயன் உண்டு. அந்த மோப்பமும் கூட ரத்தவாடை கொண்டல்ல. சிறுநீரும், மலமும், எச்சிலும்தான் மோப்பத்திறனுக்கான கூறுகள். அவைகளைக் கொண்டே காட்டில் மிருகங்கள் சமநிலையுடன் சாதிச்சண்டை இல்லாமல் உயிர் வாழ்கின்றன.
காட்டில் புலியைப் போல ஒரு கூச்ச சுபாவமுள்ள மிருகம் வேறு இல்லை. நீங்கள் யானை, புலியைக் காண கானகம் செல்ல நேரிட்டால், நன்கு அலசப்பட்ட பருத்தி ஆடை அணிந்து , பவுடர், பர்ஃப்யூம் இல்லாமல் சென்றால் அவைகளைக் காண வாய்ப்புகள் அதிகம். இல்லையெனில் 3 கிமீ தொலைவிலேயே இந்த வாசனைகளை நுகர்ந்து
புலி கூச்சப்பட்டு வேறுபாதையில் விலகிச் சென்றுவிடும். எனவே கானக உலாவில் கவனமாக இவைகளைத் தவிருங்கள்.
சரி! புலி எப்போது, எப்படி, யாரை வேட்டையாடும்?
மனிதனைப் போலன்றி புலி பசித்தால் மட்டுமே வேட்டையாடும்.
புலியின் மிக முக்கியமான சொத்து பற்கள். அதிலும் முன்னிரண்டு மேற்பற்கள்.
வேட்டைக்கான இரையைத் தேர்ந்தெடுப்பதில் புலி மிக கவனமாக இருக்கும். தனது பல் உடையும்படி சண்டையிட நேரிடுமெனில், கவுரவம் பாராமல் புலி வேட்டையிலிருந்து விலகிக் கொள்ளும். காரணம், புலி தனது பற்களை இழந்தால் அடுத்த சில மாதங்களில் பட்டினியால் சாக வேண்டியதுதான்! வேறு வழியேயில்லை.
அடுத்து, சிங்கத்தைப் போல வேட்டையாடியவுடன் அந்த உணவை புலி உடனே உண்ணாது. ஒரு மானை வேட்டையாடினால், புலி அந்த உடலை கவ்வி இழுத்துச் சென்று சற்றே உயரமான மறைவிடத்தில் ஒளித்து வைத்துவிடும். அந்த உடல் அழுகி, புழுக்கள் புழுக்கும்வரை அந்த இடத்தை விட்டு அகலாது காவலிருக்கும்.
நன்கு புழு புழுத்த இறைச்சி பதமாகியிருக்கும் என்பதால், புலி தனது பல்லுக்குச் சேதமில்லாமல் மெல்ல கடித்து உண்ண முடியும். அதன் வயிறு நிறைந்தவுடன், மீதத்தை வெளியே இழுத்துவந்து வீசிச் செல்லும். அது வரை பொறுமையாகக் காத்திருந்த நரிகளுக்கான உணவு அது.
இதெல்லாம் மேன்மக்கள் குணம்.
சரி! மனிதனை புலி எப்போது வேட்டையாடும்?
மனிதன் புலிக்கான உணவே அல்ல! காரணம் மனிதன் புலியை விட உயரமானவன். இரு கைகளையும் வீசக்கூடியவன். கையில் எப்போதும் ஆயுதமோ, வலுவான பொருளோ வைத்திருப்பவன். எனவே, மோதலில் அதன் பல் அடிபட்டு உடையக்கூடிய சாத்தியம் மிக அதிகம். எனவே புலியின் விருப்ப
மெனுவில் மனிதன் எப்போதுமே இருப்பதில்லை. புலி மனிதனைக் கொல்லும் சாத்தியம் மிகக்குறைவு. கொல்ல நேரிட்டால் அது தனது குட்டிகளைக் காப்பாற்ற, எல்லையைக் காப்பாற்ற என பல காரணம் இருக்கும். எப்போதேனும் அரிதினும் அரிதாக மனிதனைக் கொன்று சுவைக்க நேரிட்டால், முதன்முறையாக அந்தப் புலி ஒரு
மிருதுவான இறைச்சியை காண்கிறது. எடுத்துச் சென்று, ஒளித்து வைத்து, புழுக்க வைத்து உண்ணுமளவு கடினத்தன்மை அற்று முழுக்க கொழுப்பால் ஆன மிருதுவான் இறைச்சி என்பதால் புலி ஆட்கொல்லிப் புலியாக மாறுகிறது. அதிலும் வயதான, பல் வலிமையிழந்த புலிகளே அப்படியான இயல்புக்கு மீறிய பாதைக்குச் செல்கிறது
அன்றிலிருந்து அந்தப் புலி மனிதர்கள் வாழும் குடியிருப்பையே சுற்றி வரும். இரவு முழுக்கக் காத்திருந்து இயற்கை உபாதைக்கு வெளியே வருபவர்களை (அப்போதுதான் மனிதன் கையில் ஏதும் இருக்காது) அடித்து இழுத்துச் செல்லும். மனிதனை சுவைக்கத் தொடங்கிய கணத்திலிருந்து மேன்மையான அந்தக் கடவுளுக்கு
மனிதனின் சதி, சூது, ஏமாற்று என அத்தனை குணங்களும் வந்து விடும். அன்றிலிருந்து அந்தப் புலி சாகும்வரை அதன் முதல் சாய்ஸ் மனிதனே. அதிலும் பெண்களுக்கு முன்னுரிமை உண்டு. காரணம் மாதவிடாய் ரத்தவாடை அல்ல. அல்லவே அல்ல! வலிமைக்குறைவும், அதிகக் கொழுப்புதான்.
காட்டில் ஒரு ஆட்கொல்லிப் புலி
மாதவிடாய் உதிரப்போக்குடன் நடந்து செல்லும் பெண்ணையும், உடன் ஒரு சிறுமியையும் கண்டால், (ரத்தவாடையை மோப்பம் பிடித்து வந்தால்) அந்தப் புலி முதலில் அந்தச் சிறுமியைதான் வேட்டையாடும். காரணம் ரொம்ப சிம்பிள்! அந்த இரைக்கு வலிமை குறைவு. எதிர்ப்புக் குறைவு. தனது பல்லுக்கு அபாயம் குறைவு.
சபரிமலைக் காட்டிலும் புலிகள் ஆட்கொல்லிப் புலியானது உண்டு. பெண்கள் வராத காலங்களிலும் அவை மனிதர்களைக் கொன்றதுண்டு. பசித்தப் புலிக்கு ஆகமம் கிடையாது. அவை பிரசன்னம் பார்க்காது. ஆட்கொல்லியாக மாறாத புலிகள் (பெரும்பாலும் அத்தனைப் புலிகளும் இவ்வகைதான்) பசித்தபோதும், மனிதனைக் கண்டால்
விலகிச் சென்றுவிடும்.
ஆக, அன்பின் சங்கிகளே! உங்கள் ஆகமங்களைக் காக்க, ஆதிக்கத்தை நிலைநிறுத்த, நீங்கள் தேர்ந்து கற்றறிந்த வழக்கமான அரசியல் சூழ்ச்சிகளையே கையாளுங்கள். அவை நிச்சயம் உதவும். பாவம் காட்டுப்புலிகள். மக்களின் கடவுள் ஐயப்பனின் வாகனம் வேறு! அவைகளின் மீது பழி போடாதீர்கள்.🙏
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to SKP KARUNA
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member and get exclusive features!

Premium member ($30.00/year)

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!