, 29 tweets, 4 min read Read on Twitter
ஸ்டாலின் பிரச்சாரமும், தினகரன் பிரச்சாரமும் !

#Thread

இந்து தமிழ் திசை பத்திரிகையில் ஸ்டாலின் பிரச்சாரம் குறித்து இன்றும், தினகரன் பிரச்சாரம் குறித்து இரு தினங்களுக்கு முன்பும் வெளியான இரு கட்டுரைகளயும் படித்தேன்.
பொதுப்புத்திக்கு ரொட்டித்துண்டு வீசும் கட்டுரைகள். அறிவுத்தளத்தில் இந்து தமிழ் ஆற்றிவரும் பங்களிப்புகளால் அந்நாளிதழ் மேல் கொட்டப்படும் திமுக சாயத்தை வெளுக்க அவர்களுக்கு இத்தகைய கட்டுரைகள் பயன்படலாம். அல்லது அவர்களின் விமர்சன உக்கிரத்தின் தராசு இதுவாகவே கூட இருக்கலாம்.
நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை. இரண்டு கட்டுரைகளிலும் இருக்கும் லட்சிய முரண்களையும், பார்வைக்குறைகளையும் மட்டுமே குறிப்பிட விரும்புகிறேன்.
பேச்சு பாணி:

தினகரன் கட்டுரையில் அவரது பேச்சு பாணி குறித்த எந்த விமர்சனமும் இல்லை. ஒருவேளை கட்டுரையாளருக்கோ, ஆசிரியர் குழுவுக்கோ அது பிடித்தமான பாணியாக இருக்கலாம். சீரிசையான தமிழில், மேடைப்பேச்சாக பேசுவது இன்றைய ட்ரெண்ட் அல்ல என்கிற முன்முடிவு இரண்டு கட்டுரைகளிலும் தெரிகிறது.
ஒரு தலைவரின் பேச்சு ஆற்றல், மொழிவெளிப்பாடு என்பது அவர்களின் அரசியல் உருவாக்கத்தோடும், அவர்கள் வளரும் இயக்கத்தில் அவர்களின் இடம் போன்றவற்றோடும் தொடர்புடையவை.

ஸ்டாலின் உருவாக்கிக்கொண்ட பேச்சு பாணிக்கு என வரலாற்றின் ஆகச்சிறப்பான மரபு இருக்கிறது. திராவிட பேச்சு மரபு.
இன்றைக்கும் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த அரசியல் பேச்சாளர்களான வைகோ, திருமா இருவரும் இந்த மரபு பேச்சு பாணி கொண்டவர்களே. வைகோ, திருமா பேச்சு பிடிக்கவில்லை; அல்லது சலிக்கிறது என்று எவரேனும் சொன்னால் அவர்களின் அரசியல் ஆகிருதி குறைவு என்றே கருதுவேன் நான்.
ஆளானப்பட்ட கலைஞர் மீதே, சில ஆண்டுகளுக்கு முன்னால் இதே மாதிரி விமர்சனம் வைக்கப்பட்டது. 90 வயதில் ட்விட்டரில் கீச்சிக்கொண்டிருந்த தலைவரைப் பார்த்து, 'இன்றைக்கு இருக்கும் தலைமுறை வெட்டு ஒன்று துண்டு இரண்டு தலைமுறை. பழைய பாணி பேச்சில் நாட்டமில்லாதவர்கள்' என்றது தமிழ்இந்து நடுப்பக்கம்
பிரச்னை பாணி அல்ல; அதிலிருக்கும் 'Entertainment factor'. தினகரன் உங்களை நன்றாக பொழுதுபோக்குகிறார். நீங்கள் மயங்குகிறீர்கள்.
சரி, நான் திருப்பிக்கேட்கிறேன்.
தினகரனால் சீரான மேடைத்தமிழில் ஏன் பேசமுடியவில்லை? சீரான மேடைத்தமிழை பேசினால் அரசியல் மேடையில் அரைக்கால் டவுசர் பள்ளிச்சிறுவன் போல் தோற்றம் தருவோம் என்ற பயம் தானே காரணம்?
பொழுதுபோக்கு மனநிலைக்கு அரசியல் பேச்சுமேடையை அடகு வைப்பது அசிங்கம். ஸ்டாலின் தனது பாணியில், தனது மரபு கற்றுக்கொடுத்த பாணியில் பேசியிருந்தாலும், அரசியல் பேசியிருக்கிறார்.
தன்னை அதிகம் முன்னிறுத்திக் கொள்ளவேண்டும் என்கிற அவசியம் ஸ்டாலினுக்கு இல்லை. காரணம் அவர் முன்னேறி, நிலைநின்றத் தலைவர். ஸ்டாலின் ஒரு இயக்கத்தின் குரலாக பேசியிருக்கிறார்.
தினகரன் முழுக்க தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பேசுகிறார். 'தான்' என்கிற ஜனநாயகத்துக்கு முரணான மையத்துக்குள் மட்டுமே பேசுகிறார். தினகரன் பேச்சு இனிக்கிறது எனும் புத்தியினர்கள் அவரை முன்னிறுத்துக் கொள்வதைத்தவிர அதில் என்ன ஜனநாயகம் மீந்திருக்கிறது என சொன்னால் பொங்கல் வைத்துவிடலாம்.
தினகரன் பேச்சில் எண்டர்டெயிண்ட் செய்கிறேன் என்கிற பெயரில் தலைவர்கள் பேசுவதை மிமிக்கிரி செய்யும் நாராசத்தைக் குறித்து கட்டுரையில் ஒருவார்த்தைகூட இல்லாதது ஏன்?
ஸ்டாலின் குறித்த கட்டுரையில், மேடை என்பது ஜெயலலிதா பாணியில் இருக்கிறது என்கிற விமர்சனம் உள்ளது. அதற்கு காரணமாக ஊருக்கு வெளியே பிரச்சார கூட்ட இடம், சுட்டெரிக்கும் வெயில் போன்றவை சொல்லப்பட்டுள்ளன.
கட்டுரை உள்ளடக்கத்திலேயே ஆபத்தான பகுதி இது. ஜெயலலிதா பாணி என முதலில் எதை சொல்லுகிறீர்கள்? 2016 தேர்தலில் விருத்தாச்சலத்தில் மதியம் 2 மணி வரை செம்மறி ஆடாய் மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்களே அந்த பாணியா?
இல்லை ஜெயலலிதாவின் பிரச்சாரக்கூட்டத்தில் செத்துப்போனவர்களைப் பற்றி ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை உருப்படியான ஒரு கட்டுரை கூட எழுதாத நம்முடைய ஊடக நெஞ்சுரம் குறித்தா?
ஸ்டாலின் பேசிய காலைநேர மேடைகளில் ஒருசிலவற்றில் மட்டுமே மேற்கூரை இல்லை. முடிந்த அளவு மேற்கூரை அமைக்கும் முயற்சி தெரிந்தது. பொள்ளாச்சி, அரக்கோணம், தூத்துக்குடி என பல மேடைகளில் இதைக்கண்டிருக்கலாம். இதைக்கண்டுவிட்டாவது எழுதியிருக்கலாம்.
(வேட்பாளரின் பணபலம் இதற்கு காரணமாக இருக்கலாம்)
ஸ்டாலின் மேடைப்பேச்சை காலை 10 மணிக்கு தொடங்கி அதிகபட்சம் 1.30 மணிநேரம் பேசி எப்படியும் 12க்குள் முடிக்கிறார். மாலைக்கூட்டம் 7 மணிக்குதான் தொடங்குகிறது. அரசு செலவில் ஹெலிபேட் அமைத்து, பொட்டல்வெயிலில் மக்களைச் சாவடித்த ஜெயலலிதா பாணியும் இதுவும் ஒன்றா? மனசாட்சி வேண்டாமா?
50,100 ஏக்கர் நிலத்தில், ஊருக்கு வெளியே பிரச்சார மேடை என்கிறது கட்டுரை. அந்த அளவு மக்கள் வருகிறார்கள் என்றால் ஊருக்கு வெளியே தான் கூட்டம் போட முடியும். எந்த ஊரில் ஊருக்கு நடுவே அவ்வளவு இடமிருக்கிறது? அல்லது எந்த ஊரில் தேர்தல் ஆணையம் ஊருக்கு நடுவே அப்படி அனுமதி தருகிறது?
கூட்டங்களுக்கு திமுக, கூட்டணி கட்சித்தொண்டர்களே வருகிறார்கள். பொதுமக்கள் நினைத்தாலும் வர முடிவதில்லை என்கிற கட்டுரை, தமிழ்நாட்டில் வேறு எந்தத்தலைவருக்கும் கூடாத அளவுக்கு தனக்கு கூட்டம் கூடுவதால் ஸ்டாலின் மகிழ்ச்சியாக இருக்கிறார். கூட்டம் ஓட்டாக மாறுமா என தெரியவில்லை' என முடிகிறது
ஏதாவது ஒருபுள்ளியில் நின்று விமர்சியுங்கள் !

கூட்டத்துக்கு வருவது கட்சிக்காரர்கள் மட்டும் தான் என்றால், அது 100% ஓட்டாக மாறும். இல்லை, கூட்டம் ஓட்டாக மாறுமா என்ற சந்தேகம் இருந்தால், கூட்டத்திற்கு பொதுமக்கள் அதிகம் வருகிறார்கள் என ஒத்துக்கொள்ளுங்கள். பிறகு சந்தேகம் எழுப்பலாம்.
ஒருபக்கம் ஸ்டாலின் கூட்டத்தில் மக்கள் வெயிலில் வாடுகிறார்கள் என்கிறது கட்டுரை. இன்னொருபக்கம் மற்ற பேச்சாளர்கள் பேசவில்லை என்கிறது. அப்படி என்றால் ஸ்டாலினுக்கு பதிலாக, ஸ்டாலின் கூட்டத்தில் வேறு யாரும் வாட்டினால் பரவாயில்லையா?
கட்டுரையின் வாரிசு அரசியல் விமர்சனம் சிரிப்புக்குரியது. களத்திலிருக்கும் அரசியல் தலைவர்களில், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு ஒருமுறைகூட சிறைக்குச் செல்லாத நபர் தினகரன்! சசிகலாவின் அக்கா பையன் என்பதைவிட அவருக்கு இருக்கும் தகுதி என்ன? சசிகலாவின் அக்கா மகன் என்பதே ஊழல் தகுதி !
தினகரன் அரசியல் வரலாறு குறித்து கட்டுரையில் ஒரு வார்த்தைகூட இல்லை.

ஆனால், 50 ஆண்டு உழைப்புக்குப் பிறகும், ஸ்டாலினை குடும்ப அரசியல் விமர்சனம் விடவில்லை என்கிற குத்தல், பார்ப்பனிய பிரச்சார குத்தல் !
ஸ்டாலின் வேன் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்கிற அறிவுறுத்தல் யோசனைக்குரியது. அதுகூட தேவை, சூழல் சார்ந்து அக்கட்சி முடிவெடுக்க வேண்டியது. ஆனால், தினகரன் கட்டுரையில் வேன் பிரச்சாரத்தை பாராட்டி எழுதியிருக்கிறீர்கள்.
தினகரன் வேனுக்கு முன்னால் டாட்டா சுமோ பாணி வண்டிகளில் கையில் வண்ணக்கயிறுகள் கட்டிக்கொண்டு, 'ஹேய் விலகு விலகு என ஊருக்குள் ரவுசு காட்டிக்கொண்டு இளைஞர்கள் சுத்துகிறார்களே அதைப்பற்றி ஏன் சொல்லவில்லை? அவர்களின் பின்புலம் என்ன? சாதியைத் தவிர வேறு என்ன இருக்கிறது அந்த ஜம்பத்தில்?
தினகரன் பிரச்சாரத்துக்கு வருவதாய் சொல்லப்பட்டும் இளைஞர்களின் கையிலிருக்கும் கயிறு, அவர்களின் செல்போனில் இருக்கும் வால்பேப்பர், அவர்களின் ரிங்க்டோன், அவர்களின் வண்டியில் ஒட்டப்பட்டிருக்கும் வாசகங்கள் சொல்லும் அவர்களின் ஜம்பக்கூட்டத்துக்கு பின்னால் என்ன இருக்கிறது என !
தினகரன் குறித்த கட்டுரை, 'இந்தாள எப்டி நம்ப' என்றும் மக்கள் கேட்கிறார்கள், கூட்டமும் கூடுகிறது எப்படி என்று தான் புரியவில்லை என்று முடியும்.

பதில் எளிமையானது. தினகரன் கட்சி யாருக்கானது என மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. கட்டுரைக்குத் தெரியவில்லை !
தினகரன் குறித்த கட்டுரை:
google.com/amp/s/tamil.th…

ஸ்டாலின் குறித்த கட்டுரை:
tamil.thehindu.com/opinion/column…
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to Vivek Gananathan
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!